1000 rupees free for tn ration card holders
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000/- பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா..!
தமிழகத்தில் 2022 மற்றும் 2023 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 18ஆம் தேதி நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்யப் போகிறார்.
இந்த பட்ஜெட் அறிக்கையில் இதுவரை நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதி இருக்கும்.
குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் 1,000/-ரூபாய் வழங்கும் திட்டம் கண்டிப்பாக வெளியாகும், என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதி திட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவும் செய்தியாளர்களை சந்தித்தபோது வரும் தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டம் 18ம் தேதி தொடங்க உள்ளதாகவும்.
அன்று காலை 10 மணிக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் கணினி மூலம் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் நிகழ்ச்சி முழுவதும் சட்டசபையில் இருந்து நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்த கூட்டத்தொடரில் கேள்வி பதில் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், பட்ஜெட் மீது எத்தனை நாட்கள் விவாதம் செய்ய வேண்டும், என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்கு பின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்.
இதனைத்தொடர்ந்து 2022-2023 ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும் 2021-2022 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்வார்.
இந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில்.
அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆலோசிக்க படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு அறிவித்துள்ளது,தேர்தல் வாக்குறுதிகளில் சில நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தோன்றும் சில அறிகுறிகள்.
இருப்பினும் அதில் முக்கிய வாக்குறுதியாக இருப்பது, பெண்கள் அதிகம் எதிர்பார்க்கும்,வாக்குறுதியாக, இருப்பது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000/- வழங்கும் திட்டம்.
இதுவரை அமலுக்கு வரவில்லை, இதனால் பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.
Manapen Alangaram new design in tamil 2022
இந்த நிலையில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000/-ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகலாம் என்று அனைத்து தரப்பு மக்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்களுக்கு மாதம் 1,000/-ரூபாய் உதவித்தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார், முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்.