1000 scheme in tn big news announced
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி மார்ச் 8-ஆம் தேதி முதல் மாதம் ரூ 1000 பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள திமுக..!
குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000/- வழங்கும் திட்டத்தை மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு இப்பொழுது தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவுக்கு, துணைக் குழு அமைத்து தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக அரசின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் இந்த திட்டம் பார்க்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது ஆனால் இந்த திட்டம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக்கொண்டு திமுக அரசை சரமாரியாக கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் திமுக அரசை கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் இந்த திட்டம் குறித்து
இதற்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக அரசு இப்போது தீவிரமாக இதற்கு வேலைகளை தொடங்கியுள்ளது.
எப்பொழுது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
எதிர்பார்த்ததுபோல் திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட்டது ஆனால் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் இதுகுறித்து பேசத் தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் தமிழகத்தின் அருகில் உள்ள மாநிலமான புதுச்சேரியில் மகளிர் உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து தமிழகத்திலும் அறிவிப்பு எப்போது வெளியாகும் என மக்கள் கேள்விகளை கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
இதற்கு நிதி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் செயல்படுத்த முடியாது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு கடும் அதிர்ச்சி அடையச் செய்தார்.
விரைவில் அரசாணை வெளியிடப்படும்
1000 scheme in tn big news announced இதனால் விரைவில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க இப்பொழுது திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக பொருளாதார நிபுணர் குழு அமைத்து அதற்கான வேலைகளை தொடங்கி உள்ளது.
விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி இந்த திட்டம் தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.