4 person will be sent to sri lanka big news
இன்னும் 10 நாட்களில் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய தகவல் என்ன..!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான இலங்கையை சேர்ந்த 4 நபர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் பரவிய நிலையில்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன்,ராபர்ட் பாய்ஸ் உள்ளிட்ட நபர்கள் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து உள்ளார்கள்.
இதற்கிடையே அவர்கள் 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
விடுதலை செய்யப்பட்ட இலங்கை சேர்ந்த 4 நபர்கள் திருச்சியிலுள்ள இலங்கை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
சிறப்பு முகாமில் இருக்கும் நான்கு நபர்களும் சில கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்தார்கள் அதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.
காலையில் நடைபயிற்சி செய்ய இடம் வேண்டும் என்று கேட்டார்கள் அதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவில் தண்டனை பெரும் வெளிநாட்டினர் ஜாமீன் பெற்றால் அல்லது விடுதலை ஆனால் அவர்களின் வீடு இருக்காது எனவே அவர்கள் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
10 நாட்களில் சொந்த நாட்டிற்கு
அவர்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் அனைத்து வெளிநாட்டினரும் விடுதலை ஆனாலும் இதுதான் நடைமுறை.
இதுதான் நடைமுறை இப்போது அந்த நடைமுறைகள் அனைத்தும் நடக்கிறது உள்ளே இருப்பவர்கள் அவர்கள் தான் சமைத்து சாப்பிடுகிறார்கள்.
அவர்கள் கேட்கும் உணவை நாங்கள் ஏற்பாடு செய்து விடுவோம் உறவினர்கள் வந்து பார்ப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை.
4 person will be sent to sri lanka big news சிறப்பு முகாமில் அனுமதி பெற்று உறவினர்கள் வந்து பார்க்கலாம் அவர்களுக்கு எந்த ஒரு தடையும் இல்லை உள்ளே செல்போன் வைத்திருக்க அனுமதி இல்லை.
4 person will be sent to sri lanka big news அடுத்த 10 நாட்களில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி இப்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளது.
4 நபர்களில் ஒருவர் மீது மட்டும் வழக்கு உள்ளது அதுவும் விரைவில் முடிந்தவுடன் அந்த நபரையும் இலங்கைக்கு அனுப்பி விடுவோம்.