5 Dangerous killer disease in the world
இந்த அமைதியான நோய்கள் அறிகுறிகள் இல்லாமல் உங்கள் உயிரை பறித்துவிடும் மிகுந்த எச்சரிக்கை..!
இன்றைய காலகட்டங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும்பாலான நோய்களால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.
சாதாரண நோய் முதல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சைலன்ட் கில்லர் நோய்கள் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
5 Dangerous killer disease in the world இதற்கு முக்கிய காரணம் நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றம் தான், உணவுகள் மற்றும் நம் வாழ்க்கைமுறை செயல்கள் அனைத்தும் நாம் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
இதனால் எல்லோரும் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகிறார்கள் சில நோய்களைத் தடுக்கக் கூடியவை என்றாலும் மற்றவை கண்டுபிடிப்பது கடினம்.
ஆனால் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையானது எளிதில் தடுக்கக் கூடியதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை
5 Dangerous killer disease in the world அதிக கொலஸ்ட்ரால் ஒரு சைலன்ட் கில்லர் என்று இப்பொழுது மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது ஏனெனில் அதிக கொலஸ்ட்ரால் அளவு ஆபத்தான உயர்வை அடையும்வரை நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளையும் தெரியப்படுத்தாது.
அது ரத்தத்தில் (எல்டிஎல்) கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படும், கொழுப்பு பொருள் அதிகமாக குவியும் போது அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது.
ஆரோக்கியமற்ற கொழுப்பு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது போன்ற பழக்கங்களால் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது.
நீரிழிவு நோய்
ஒரு நபரின் ரத்த ஓட்டத்தில் அதிக குளுக்கோஸ் அல்லது ரத்த சர்க்கரை இருந்தால் அது நீரிழிவு நோயை குறிக்கிறது, கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாத போது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் திறம்பட பயன்படுத்த முடியாத போது சர்க்கரை நோய் உருவாகிறது.
நீரிழிவு நோய் உடல்நிலை குறைபாட்டை ஏற்படுத்துகிறது, முக்கியமாக இது ஒரு சைலன்ட் கில்லர் நோய் என்று மருத்துவர்கள் அழைக்கப்படுகிறது.
5 Dangerous killer disease in the world ஏனெனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயாளிகள் தங்களுக்கு இந்த நிலை இருப்பதை தெரிந்துகொள்ள முடிவதில்லை, நோய் ஒரு குறிப்பிட்ட நிலை அடைந்தவுடன் மட்டுமே இதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
புற்றுநோய்
புற்றுநோய் என்பது உயிருக்கு ஆபத்தான சுகாதார நிலை மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பெரும்பாலான புற்று நோய் அமைதியாக உங்களுக்கு ஏற்படுகிறது.
5 Dangerous killer disease in the world ஸ்கிரீனிங் மூலம் மட்டுமே கண்டறியப்படுகிறது அல்லது உறுதிப்படுத்தப்படுகிறது.
இது புற்றுநோயை தடுப்பதற்கும் ஆரம்பகால நோய்கண்டறிதளை செய்வதற்கு ஒரு முக்கியமான கருவியாகும்.
உங்கள் உடலில் இருக்கும் புற்றுநோய்களில் இருப்பிடத்தைப் பொறுத்து உங்களுக்கான சிகிச்சை முறைகள் தொடங்கலாம்.
உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது, ரத்தநாளங்களில் சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் திசை தொடர்ந்து அதிகமாக இருக்கும் போது இது நிகழ்கிறது.
இந்த நிலையை கட்டுப்படுத்தப்படாத விட்டால் அல்லது தடுக்காவிட்டால் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை பலமடங்கு அதிகரிக்கும்.
சில சமயங்களில் இது ஆபத்தை ஏற்படுத்தலாம், உயர் ரத்த அழுத்தம் ஆபத்தான நிலையில் இருந்தால் எந்த அறிகுறிகளையும் தெரியப்படுத்தாது.
கொழுப்பு கல்லீரல் நோய்
கொழுப்பு கல்லீரல் நோய்கள் இரண்டு வகைகளாக உள்ளன அவை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய்.
கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்ட சிலருக்கு எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை.
இது ஒரு அமைதியான கொலையாளி இந்த சுகாதார நிலையில் மக்கள் எந்த அறிகுறிகளையும் கண்டுபிடிக்க முடியாது.