500 rupees reward for sending photos useful
புகைப்படம் அனுப்பினால் 500 ரூபாய் பரிசு மத்திய அரசின் புதிய திட்டம் என்ன..!
தவறான இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டதை புகைப்படம் எடுத்து அனுப்பும் நபருக்கு 500 ரூபாய் பரிசு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தால் விபத்துகளை தவிர்க்கலாம் ஆனால் சாலைகளில் வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவதுபோல் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில்லை மெத்தனம் காட்டுகிறார்கள்.
அதிகரிக்கும் விபத்து காரணம்
அதுமட்டுமில்லாமல் பார்க்கிங் இல்லாத இடங்களில் கூட வாகனங்களை நிறுத்திவிட்டு விபத்திற்கு வழிவகை செய்கிறார்கள் இதனை முழுவதும் தடுக்கும் வகையில் சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
புதிய திட்டம் என்ன
அதாவது சாலையோரங்களிலும், தெருக்களிலும், தேவையற்ற இடங்களில் அல்லது அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது.
அதன் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் விபத்து போன்றவற்றை கட்டுப்படுத்தவும் சாலை போக்குவரத்து அமைச்சகம் தற்போது புதிய முடிவுகளை எடுத்துள்ளது.
தவறான இடங்களில் நிறைய நபர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதை தடுக்க.
தவறான பார்க்கிங் குறியீடு, துப்பு கொடுப்பவர்களுக்கு, சன்மானம் வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அதாவது தவறான இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்யப்பட்டதை பொதுமக்கள் யாராவது பார்த்தால் அதனை போட்டோ எடுத்து.
அரசு தெரிவிக்கும் இணையதளத்திற்கு அல்லது மொபைல் நம்பருக்கு அனுப்பினால் அவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் முறையற்ற பார்க்கிங் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினசரி நடக்கும் விபத்துக்கள் எவ்வளவு
500 rupees reward for sending photos useful இந்தியாவில் நடக்கும் தினசரி விபத்துக்களால் ஒரு நாளைக்கு குறைந்தது 400 நபர்கள் உயிரிழக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம் மற்ற நாடுகள் பல்வேறு வகையான விதிமுறைகளை விதித்து உயிரிழப்புகளை கட்டுப்படுத்துகிறது.
இந்தியாவில் சாலை விதிகளை மக்கள் சரியாகப் பின்பற்ற வைக்க அரசு இப்பொழுது பல்வேறு வகையான புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது.
இதன் மூலம் வருங்காலத்தில் கட்டாயம் விபத்துக்கள் இல்லாத சாலைகளாக இந்தியா உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.