6 persons acquitted by special verdict
ராஜீவ் கொலை வழக்கு நளினி உட்பட 6 பேர் விடுதலை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன பரபரப்பு தகவல்..!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்.
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் குறித்து தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிரசாதத்திற்காக தமிழகம் வந்திருந்த போது கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் பேரறிவாளன், நளினி,ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு.
அவர்கள் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் காலங்களை கடத்தி வருகிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன
இவர்களை விடுவிக்க தமிழக ஆளுநர் காலதாமதம் செய்ததால் உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நபர்களை விடுதலை செய்துள்ளது.
குறிப்பாக பேரறிவாளனை கடந்த மே மாதமே உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதற்கு பிறகு இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 6 நபர்களும் தனித்தனியாக தங்களையும் விடுவிக்கக்கோரி வழக்குகளை தொடர்ந்தார்கள்.
வழக்கறிஞர்கள் தெரிவித்த செய்தி என்ன
இந்த வழக்கில் பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபுதான் இவர்கள் சார்பிலும் ஆஜராகியிருந்தார்.
இந்த தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் பிரபு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்.
பேரறிவாளனின் விடுதலை தீர்ப்பை குறிப்பிட்டு மற்றவர்களையும் விடுவிக்க கோரிக்கை வைத்திருந்தோம்.
இதுதொடர்பாக தனித்தனியாக மனுக்களை செய்திருந்தோம் வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6 நபர்களை விடுதலை செய்துள்ளது.
விடுதலை செய்ய என்ன காரணம்
6 persons acquitted by special verdict பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அவரின் வயது, அவர் சிறையில் இருந்த ஆண்டுகள், சிறையில் அவருடைய நன்னடத்தை, அவருடைய உடல்நலம், அவருடைய கல்வி தகுதி.
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது, அதேபோலத்தான் இவர்களுக்கும் விடுதலை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் தெரிவித்த முக்கிய கருத்து
6 persons acquitted by special verdict ஆளுநரின் செயல்பாடு என்பது அனைவருக்கும் சமம் 7 நபர்களையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான் அமைச்சரவை தீர்மானம்.
இதன் அடிப்படையில்தான் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார் இதில் ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து விட்டார்.
இதனால்தான் 6 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர் அனைவருமே 31 ஆண்டுகளாக தங்களுடைய வாழ்க்கையில் சிறையில் இருந்து உள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.