agneepath scheme full details useful tips 2022
பற்றி எரியும் வட மாநிலங்கள் எதற்காக இந்த கடுமையான போராட்டம்..!
பாதுகாப்பு படை நியமனங்களில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது, பாதுகாப்புத்துறை வீரர்களின் நியமனங்களில் 25% ஒப்பந்த முறையில் பணியமர்த்த கோரி உள்ளது.
இந்த திட்டம் அறிவிக்கும்போது நாடு முழுவதிலும் பெரிய வரவேற்பு இருந்த நிலையில் அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகு.
இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு குறிப்பாக வடமாநிலங்களில் உருவாகி பெரும் போராட்டங்கள் ரயில் நிலையங்களுக்கு தீவைப்பு, கட்சி அலுவலகம் எரிப்பு, என பல்வேறு வகையான போராட்டங்கள் வெடித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இந்திய பாதுகாப்பு துறையில் அதிக இளைஞர்களை கொண்டிருக்கும் இந்த திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்கள் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
இவர்கள் அக்னி வீரர் என்று அழைக்கப்படுவார்கள், இவர்களுக்கு சம்பளம் கொடுப்பது, என அனைத்தும் சலுகைகளும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீரர்கள் எப்படி பணி அமர்த்தப்படுவார்கள் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் மற்ற சலுகைகள் என்ன கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்
மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் ராணுவம், கப்பல், விமான படை, என மூன்று பிரிவுகளிலும் பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 17 1/2 வயது முதல் 21 வயது உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுக்கு பிறகு என்ன
இந்த அக்னி வீரர்களின் 25 சதவீதம் பேர் வழக்கமான (Regular Cadre) கீழ் கொண்டு வரப்படுவார்கள்.
இந்த நான்கு ஆண்டுகால பணிக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் சேவை வரி பேக்கேஜ் வழங்கப்படும் இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்கும்.
எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்
agneepath scheme full details useful tips 2022 அக்னி வீரன் என அழைக்கப்படும் இவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25% பேர் மட்டுமே இராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு இந்தத் திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் 4 வருடங்களுக்கு பின் வெளியேறலாம் விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம்.
மக்கள் எதிர்ப்புக்கு இதுதான் காரணம்
agneepath scheme full details useful tips 2022 இந்தத் திட்டத்தில் 4 வருடம் பணியாற்றுவதற்கு சம்பளம் கொடுக்கப்பட்டாலும் அதன் பிறகு ஓய்வு ஊதியம் கிடையாது அதேபோல் 25% நபர்கள் மட்டுமே நிரந்தரமாக அடுத்த 15 வருடம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
4 வருடம் கழித்து 75% பேர் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும் இதனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.