AIADMK General Committee case best tips 2023
இது தவறு என்றால் அதுவும் தவறு ஓபிஎஸ் தான் அனுமதித்தார் நீதிமன்றத்தில் எடப்பாடி இப்படி சொல்லிட்டாரே..!
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தில் அதிமுக பொதுக்குழு ஓ பன்னீர்செல்வத்திற்கு தெரியாமல் நடைபெறவில்லை என்று சொல்லமுடியாது.
ஓ பன்னீர் செல்வத்திற்கு பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது குறித்து நன்கு தெரியும்.
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை இப்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது, இன்று எடப்பாடி கே பழனிசாமி வைத்த வாதம் நாளைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர், பதவிகள் நீக்கப்பட்டது மற்றும் அந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தப் பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் வைரமுத்து ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர் மனு கொடுத்துள்ளது இந்த வழக்கு தான் தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
எடப்பாடி வைத்த முக்கியமான வாதம் என்ன
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று எடப்பாடி கே பழனிசாமி தரப்பு வைத்த வாதத்தில் அதிமுக பொதுக்குழு பன்னீர்செல்வத்துக்கு தெரியாமல் கூடவில்லை என்று சொல்லமுடியாது.
பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது குறித்து நன்கு தெரியும் ஜூன் மாதம் 23ஆம் தேதி பொதுக்குழுவில் தான் ஜூலை 11-ஆம் தேதி மறுபடியும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போது பொதுக்குழு மேடையில் ஓ பன்னீர்செல்வம் இருந்தார் அவரிடம் பொதுக்குழு நடத்தும் தேதியை மேடையிலேயே தான் எல்லோருக்கும் முன் அறிவித்தோம்.
அப்படியிருக்கும்போது பொதுக்குழு அவருக்கு தெரியாமல் எப்படி கூற முடியும் என்ற கேள்வியை எடப்பாடி கே பழனிசாமி தரப்பு எழுப்பி உள்ளது.
பொதுக்குழு கூடியது ஜூலை 11ஆம் தேதி
ஜூன் 23ம் தேதி ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவை பற்றி அறிவித்தது ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்கிறார் அப்படி இருக்கும்போது இதில் குறை கூற என்ன இருக்கிறது.
அதிமுகவில் முக்கியமாக ஒரு விதி இருக்கிறது அந்த விதி தான் பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் கொண்ட என்ற விதி.
பொதுக்குழு நினைத்தால் எந்த முடிவையும் எடுக்க முடியும் அதே போல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கவும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் சில விதிகள் இருக்கிறது.
அடிப்படை உறுப்பினராக இருக்க அதிமுக வின் பொதுக்குழு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதிமுகவில் இருக்கும் முக்கியமான விதி
அதேபோல் பொதுக் குழுவில் உறுப்பினராக இருக்க கட்சியின் பொதுக்குழு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் ஆனால் பன்னீர்செல்வம் இந்த இரண்டு விதிகளையும் மீறி விட்டார்.
AIADMK General Committee case best tips 2023 இந்த இரண்டு விதிகளையும் பின்பற்றாமல் இருந்ததால்தான் பொதுக்குழுவை கூட்டி ஓ பன்னீர் செல்வத்திற்கு எதிராக முடிவு எடுத்தோம்.
நான் பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நிக்கவில்லை பொதுக்குழு தான் பன்னீர்செல்வத்தை நீக்கியது.
அதிமுக பொது செயலாளர் பதவியை பொதுக்குழு தான் நீக்கியது அப்போது அதை பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டார்.
இப்போது பன்னீர் செல்வத்திற்கு என்ன ஆயிற்று
AIADMK General Committee case best tips 2023 அப்போது மட்டும் ஓ பன்னீர் செல்வத்திற்கு இது சரியாக பட்டது ஆனால் இப்போது மட்டும் அதை பன்னீர்செல்வம் எதிர்க்கிறார்.
அதேபோல் பொதுக்குழு தான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கியது.
பொதுக் குழு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்புதல் அளிக்க முடியும்.
AIADMK General Committee case best tips 2023 பொதுக் குழுதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்க முடியும்.
பொதுக் குழுதான் பொருளாளர், பொதுச் செயலாளர் பதவியையும் தேர்ந்தெடுக்க முடியும்.
அப்படி இருக்கும்போது இதை மட்டும் ஓ பன்னீர்செல்வம் எப்படி எதிர்க்கலாம் பொதுக்குழுவில் விதிகளை பின்பற்றும் நபர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும்.என்று கட்சியின் அடிப்படை விதி கூறுகிறது.
AIADMK General Committee case best tips 2023 பன்னீர்செல்வம் அடிப்படை விதியை பின்பற்றாமல் இருப்பதால்தான் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்ற எடப்பாடி கே பழனிசாமி தரப்பு வாதம் வைத்துள்ளது.
ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பன்னீர் செல்வத்திற்கு இருக்கைகள் வைக்கப்பட்டது அவர் பொது குழுவிற்கு வராமல் அதிமுகவின் அலுவலகத்திற்கு சென்று.
அங்கு அலுவலகத்தை அடித்து அலுவலகத்தில் இருந்த பொருட்களை எல்லாம் திருடிச் சென்றார் என எடப்பாடி கே பழனிசாமி தரப்பு காரசாரமான விவாதங்களை நீதிமன்றத்தில் வைத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்ந்த நாளைக்கும் விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.