AIADMK general committee case big news 2022
அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் என்ன முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..!
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.
அப்பொழுது எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வைத்த முக்கியமான கோரிக்கை ஒன்று நிராகரிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு விற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 16ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது இந்த பொதுக்குழு சட்டவிரோதமாக நடந்ததாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தனி நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது தவறு என தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து எடப்பாடி தரப்பு மேல்முறையீட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது சரிதான் என தீர்ப்பு வழங்கினார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்தப் பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொதுக்குழு செல்லும் என்றும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார்.
கடைசியாக கடந்த 30ஆம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்.
கட்சியில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது என்று தீர்ப்பு வழங்கி அடுத்த விசாரணை நவம்பர் 21ஆம் தேதி வரும் என மாற்றப்பட்டது.
எடப்பாடி வைத்த முக்கியமான கோரிக்கை
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி வைத்த முக்கியமான கோரிக்கை ஒன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வழக்கு இன்று வரை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது இது பொதுக்குழு மூலம் எடுக்கப்பட்ட முடிவு.
இந்த வழக்கை உடனடியாக முடிக்கப்பட வேண்டும் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால்.
கட்சியால் சரியாக செயல்பட முடியவில்லை கட்சி முடங்கி போய் உள்ளதால் வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு புதிய அமர்விற்கு மாற்றப்பட்டால் அதே நாளில் விசாரணை தொடங்கப்படும்.
புதிய வழக்கு என்றால் விசாரணை இல்லை பழைய வழக்கு என்றால் ஏற்கனவே வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதிகள் படிக்கவேண்டும்.
AIADMK general committee case big news 2022 வழக்கின் தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் அதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை படிக்க வேண்டும்.
இதனால் அதே நாளில் விசாரணை தொடங்கபடுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
AIADMK general committee case big news 2022 இதை தெரிந்தும் இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பதில் மனு தாக்கல் செய்ய கால தாமதம்
AIADMK general committee case big news 2022 இந்த வழக்கில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பதில் மனு தாக்கல் செய்துவிட்டார் ஆனால் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள் இதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் ஒரு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளார்கள்.
ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்
இந்த வழக்கு விசாரணை இந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.