AIADMK general committee hearing big 2022
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடந்தது என்ன கடும் கோபத்தில் எடப்பாடிபழனிசாமி தரப்பு..!
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாக ஓபிஎஸ் பொதுக்குழு உறுப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.
அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17ஆம் தேதி அளித்த தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லாது.
அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு
இதை எதிர்த்த எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு.
தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்தார்கள்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தார்கள்.
கேவியட் மனு தாக்கல் செய்த அதிமுக குழு
எடப்பாடி பழனிசாமி அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது,கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது.
ஈபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கேட்கப்பட்டது அதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணை கால தாமதம் ஏன்
AIADMK general committee hearing big 2022 உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அதன் பிறகு நடந்த சில மாற்றங்கள் வழக்கு விசாரணை வேறு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதனால் இந்த வழக்கு விசாரணை இப்போது கால தாமதம் ஆகியுள்ளது உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பு குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் டிசம்பர் 6ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொண்டு அதன் பிறகு தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
AIADMK general committee hearing big 2022 இதற்கு ஓபிஎஸ் தரப்பு டிசம்பர் 12ஆம் தேதிக்கு மேல் இந்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
ஆனால் உச்சநீதிமன்றம் அவர்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது காரணம் இந்த வழக்கு ரொம்ப காலதாமதம் ஆகிறது.
அது மட்டுமில்லாமல் ஒரு கட்சியின் செயல்பாடு முற்றிலும் முடங்கியுள்ளது இந்த வழக்கு விசாரணையை வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்.
அன்றைய தினத்திலிருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இன்று டிசம்பர் 6ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த எடப்பாடி கே பழனிசாமி குழு கடும் கோபத்தில் இப்போது ஓபிஎஸ் மீது இருக்கிறார்கள்.
AIADMK general committee hearing big 2022 அவர் வேண்டுமென்றே வழக்கு விசாரணையை தள்ளி வைக்கிறார், இந்த வழக்கு விசாரணை வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரை.
இழுத்தடிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதால், இதனை உடனடியாக முடிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பினர் இப்பொழுது கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.