Atherosclerosis Disease useful tips 2022
மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல் முக்கியமான காரணத்தை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளார்கள்..!
இன்று உலகில் அதிக மக்கள் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது இருதய நோய்கள் மட்டுமே.
இதய நோய்கள் ஒருவருக்கு எந்த நேரத்தில் எப்படி ஏற்படுகிறது என்பதை மருத்துவர்களால் இன்றுவரை கணிக்க முடியவில்லை.
உடல் பருமன் அதிகமாக இருக்கும் நபர்கள் முதல் எடை குறைவாக இருக்கும் நபர்கள் வரை இருதய நோய் என்பது இருக்கிறது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இருதய நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதய நோய் என்பது திடீரென்று மக்களை கொள்ளக்கூடிய ஒரு கொடிய நோயாக இருக்கிறது.
இதனால் பல லட்சம் மக்கள் தங்களுடைய சொந்தங்களை இழந்து துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
இதற்கு எப்படியாவது ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென மருத்துவத் துறையும் தீவிர முயற்சியில் இருக்கிறது, ஆனால் அதற்கான எந்த ஒரு பலனும் முழுமையாக இதுவரை கிடைக்கவில்லை.
காரணம் அதற்குநம்முடைய வாழ்க்கை முறை என்பது மட்டுமே.
இருதய நோய்கள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் என்பது இருதய தமனிகளில் கொழுப்பு கொலஸ்ட்ரால் மற்றும் இதர பொருட்கள் குவிவதால் ஏற்படுகிறது.
இது பெருந்தமனி தடிப்பு என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது.
இது குழந்தையாக இருக்கும்போதே உருவாகத் தொடங்கிவிடுகிறது.
அதுமட்டுமில்லாமல் உடலின் திசுக்களுக்கு போதுமான ரத்தம் செலுத்த முடியாமல் இதயத்திற்கு அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது.
பெருந்தமனி தடிப்பு தான் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இருதய தமனிகளில் தடிப்பு வர காரணம்
இருதய தமனி தடிப்பு தோல் தானே சுற்றி பிளேக் கட்டப்படுவதால் தமனிகள் குறுகி கடினமாக இருக்கும்.
இதனால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் சிறிதுசிறிதாக தடைபட தொடங்குகிறது.
கொழுப்பு, கால்சியம், கனிமங்கள், வைட்டமின்கள், இரும்புச் சத்து, மெக்னீசியம் போன்ற பிற பொருட்களால் இது உருவாகிறது.
இதனால் ரத்த ஓட்டம் சீர்குலைந்து கடுமையான இருதய பாதிப்பு ஏற்படுகிறது.
சில சமயங்களில் ரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
புகைப்பிடித்தல், மது அருந்துவது, அதிக தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய்,சுகாதாரமற்ற உணவுகள், இறைச்சி வகைகள், அதிகமாக எடுத்துக்கொள்வது.
இதுபோன்ற காரணங்களால் இருதய தமனிகளில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இருதய தமனி அடைப்பு வராமல் தடுப்பது எப்படி
Atherosclerosis Disease useful tips 2022 இருதய தமனி பாதிப்பு வராமல் இருப்பதற்கு நம்மளுடைய வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டும்.
முதலில் சரியான அளவில் தூங்கவேண்டும், நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இயற்கை முறையில் கிடைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும், கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத உணவுகளை தேர்வு செய்ய வேண்டும்.
மது அருந்துவது, புகை பிடித்தல் கூடாது, இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
Atherosclerosis Disease useful tips 2022 இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கட்டாயம் தினசரி காலை அல்லது மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இதனால் மன அழுத்தம் குறையும், வேலை பளு குறையும், சரியான அளவில் தூங்க முடியும், நேர்மறையாக உங்களால் சிந்திக்க முடியும்.
இயற்கையான வாழ்க்கை முறையை நீங்கள் கடைபிடித்தால் கட்டாயம் நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம்.
அதுமட்டுமில்லாமல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்களுடைய முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக மிக நல்லது.
6 மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்யுங்கள், இதனால் உங்கள் இரத்தத்தை பற்றி முழுமையாக பரிசோதனை செய்யக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.