Best 3 Post Office Savings Schemes In Tamil
அதிக வட்டி தரும் 3 அஞ்சல் அலுவலக திட்டங்கள் என்ன..!
நமது இந்தியாவில் தபால் நிலையத்தில் பல வகையான சிறந்த சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது, அவை அனைத்தும் மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லலாம்.
ஏனென்றால் குறிப்பாக எளிய மற்றும் நடுத்தர, ஏழை மக்களுக்கு பயன்படுத்தப்படும் சிறு சேமிப்பு திட்டங்களும் இருக்கின்றன.
அதேபோல் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில், அதிக வட்டி தரக்கூடிய, அஞ்சலக சேமிப்பு திட்டங்களும் இருக்கிறது.
எனவே இந்த பதிவில் உங்களுக்கு அதிக வட்டி தரும் சிறந்த சேமிப்பு திட்டங்களை பற்றி முழுமையாகப் பார்க்கப்போகிறோம்.
தேசிய சேமிப்பு பத்திரம் திட்டம் (National saving certificate post office)
அதிக வட்டி தரும் தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே சமயம் ஆபத்து குறைவான ஒரு சேமிப்பு திட்டமாக இது மக்களால் பார்க்கப்படுகிறது.
குறைந்தபட்ச முதலீடாக ரூபாய் 1000 முதல் அதிக பட்சம் முதலீட்டிற்கு வரம்பு ஏதுமில்லை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம்.
2022 ஜூலை 13-ஆம் தேதி இன் படி இந்த திட்டத்தின் கீழ் சேமிப்புக்கு ஆண்டுக்கு 6.8 சதவீத வட்டி என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு 100,000/- ரூபாய் முதலீடு செய்துள்ளீர்கள் எனில் ஐந்து வருடம் கழித்து உங்கள் முதலீடு 138,900 ரூபாயாக அதிகரிக்கும்.
இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரண்டு மடங்கு அதிகரிக்கும்.
அஞ்சல் துறையில் கிசான் விகாஸ் பத்திர திட்டம்
Best 3 Post Office Savings Schemes In Tamil உங்களது முதலீட்டை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த விகாஸ் பத்திர சேமிப்பு திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஏனென்றால் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ளலாம்.
10 லட்சம் மற்றும் அதற்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும் பொழுது உங்களது வருமானத்திற்கான ஆதாரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்.
நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் கழித்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம் ஜூலை 13 தேதியின்படி இந்த திட்டத்தின் கீழ் சேமிப்புக்கு ஆண்டுக்கு 6.9 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
அஞ்சலக மாதாந்திர வருமானம் திட்டம்
Best 3 Post Office Savings Schemes In Tamil தபால் அலுவலக மாதாந்திர வருமானம் திட்டம் என்பது நிதி அமைச்சகத்தின் நேரடி பார்வையில் மக்களுக்கு பயன்படுத்தப்பட அறிமுகம் செய்யப்பட்டது.
இது மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த சேமிப்பு திட்டம் ஆகும், இதில் ஒருவர் ரூபாய் 4.5 லட்சம் ரூபாய் வரை தனியாகவும் ரூபாய் 9 லட்சம் ரூபாய் வரை கூட்டாகவும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம்.
2022 ஜூலை 13-ம் தேதியின்படி இந்த திட்டத்தின் கீழ் அமைப்புகளுக்கு ஆண்டுக்கு 6.6 சதவீதம் வட்டி மாதந்தோறும் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.