Best 5 tips beware of EB bill scam in India
உஷார் மக்களே ! இப்படி ஒரு SMS உங்களுக்கு வந்தால் அதை நம்ப வேண்டாம் EB பில் மூலம் பணத்தை மோசடி செய்யும் புதிய கும்பல்..!
உங்களுடைய EB பில் கட்டணம் செலுத்தப்படவில்லை அதை உடனே செலுத்துங்கள்.
இல்லை என்றால் உங்களுடைய மின்சார இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் என தெரிவிக்கும்,உங்களுடைய போனுக்கு SMS வந்தால் உடனே பதட்டமடைய வேண்டாம்.
குறிப்பாக இந்த SMS உடன் அனுப்பப்பட்டு உள்ள லிங்கை மட்டும் நீங்கள் கிளிக் செய்ய வேண்டாம்.
இது ஒரு புதிய நூதன மோசடி கும்பல் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்
இந்தியாவில் சைபர் கிரைம் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
NCRB தகவலின்படி இந்தியாவில் 4047 இணையதள வங்கி மோசடி வழக்குகள்.
2160 ஏடிஎம் மோசடி வழக்குகள்.
1194 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடி வழக்குகள் மற்றும் 1093 OTP மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது.
இப்போது நாடு முழுவதும் இதுவரை நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றி மற்றொரு மோசடியும் தொடர்கிறது அது கரண்ட் பில் சம்பந்தமான மோசடி.
ஒரே அழுத்தில் உங்களுடைய மொத்த பணமும் காலியாகிவிடும்
மோசடி செய்பவர்கள் மக்களுக்கு தங்களுடைய மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்று ஒரே இணையதள லிங்க் உடன் ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்.
இந்த லிங்கை பொதுமக்கள் தெரியாமல் கிளிக் செய்வதன் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் திருடப்படுகிறது.
மின் கட்டண மோசடி கடந்த பல மாதங்களாக நடந்து வரும் நிலையில் அவர்களின் வங்கிக் கணக்குகளை மோசடி செய்பவர்கள் காலி செய்து வருகிறார்கள்.
மோசடியில் சிக்காமல் இருக்க என்ன வழி
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இதுபோன்ற மோசடி குறித்து எப்போதும் விழிப்புடன் கவனமுடன் இருக்க வேண்டும்.
இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களை எப்படி பாதுகாப்பது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்கான சில குறிப்புகளையும் இந்த பதிவில் வழங்கியுள்ளோம் சைபர் கிரைம் அதிகாரிகள், ஜார்க்கண்டில் உள்ள மாவட்டத்தில் இருந்து மோசடி செய்தவர்களை கைது செய்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.
குறுஞ்செய்தி மூலம் மோசடி கும்பல் செய்யும் அட்டகாசம்
Best 5 tips beware of EB bill scam in India இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தினம் தோறும் தொடர்ந்து வருகிறது குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து மட்டுமே இந்த மாதிரி மோசடி கும்பல் செயல்படுவதாக சமூக வலைதளங்களில் அடிக்கடி செய்திகள் வெளிவருகிறது.
உங்களுடைய மொபைல் போனுக்கு திடீரென்று ஒரு குறுஞ்செய்தி வரும் அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்ய சொல்லுவார்கள் அதனை நீங்கள் கிளிக் செய்தால்.
உங்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் அனைத்து பணமும் காலியாகி விடும்.
உங்களை கவர்வதற்கு பல்வேறு வழிகளில் மோசடிக் கும்பல்கள் செயல்படுவார்கள்.
ஈபி பில்,எல்பிஜி கேஸ் பில், மொபைல் பில், உங்களுக்கு பணம் பரிசளித்திருக்கிறது என பல்வேறு முறைகளைப் பயன்படுத்துவார்கள்.
இதில் நீங்கள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.
வாட்ஸ் அப் மூலம் தொடங்கியுள்ள மோசடியும்
Best 5 tips beware of EB bill scam in India இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது நீங்கள் எப்பொழுதும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
உங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை நீங்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் இப்போது வாட்ஸ்அப்பில் பல்வேறு விதமான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகிறது.
இதனை கிளிக் செய்யுங்கள்,அதை கிளிக் செய்யுங்கள் என பல்வேறு விதமான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகிறது.
இதிலும் இப்பொழுது பல்வேறு விதமான மோசடிகள் தொடங்கி உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மோசடி கும்பல் உங்களை தொடர்பு கொள்ளும்
Best 5 tips beware of EB bill scam in India பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த மோசடிக்காரர்கள் அழைப்பிதழ் மூலம் உங்களை தொடர்பு கொண்டு அதிகாரிகள் போல் உங்களிடம் பேசி.
உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை சேகரித்து கொண்டு பணத்தை திருடி விடுவார்கள்.
இந்த மோசடியில் இதுவரை சிக்கி பணத்தை இழந்தவர்கள் ஏராளம் இதுபோன்ற சிக்கலில் சிக்காமல் இருப்பதற்கு நீங்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சிக்கலில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
Best 5 tips beware of EB bill scam in India அதிகாரி போல் அல்லது சந்தேகத்துக்குரிய இணைப்புகள் மூலம் உங்களை யாரும் தொடர்பு கொண்டால் அவர்களை எப்பொழுதும் நம்ப வேண்டாம்.
உங்களுடைய மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும்.
Best 5 tips beware of EB bill scam in India உங்களுடைய ஏடிஎம் கார்டு (ATM CARD) சேவை நிறுத்தப்படும் என பல வழிகளில் உங்களை மோசடி கும்பல் தொடர்பு கொள்ளும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக உங்களுடைய மொபைல் போனுக்கு (OTP) போன்ற தகவல்கள் வரும் இதனை யாரிடமும் நீங்கள் பகிர கூடாது.