Best Free medical treatment up to Rs 5 lakh
ரூபாய் 5 லட்சம் வரை இலவச மருத்துவம் மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!
ஆயுஷ்மான் பாரத் பிரதமர் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ஒரு ரூபாய் 5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது.
உலக நாடுகளைப் பொறுத்தவரை பொது மருத்துவம் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி இன்னும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தனியாருக்கு இதனை அதிகாரப்பூர்வமாக கொடுக்கவில்லை, ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது.
அரசின் திட்டம் என்ன
அந்தக் குற்றச்சாட்டை போக்கும் வகையில் எல்லா இந்திய குடிமக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக.
கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன்தன் யோஜனா (Ayushman Bharat Bharat Mantri Jan Arogya Yojana)திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் துவங்கி வைத்தார்.
5 லட்சம் ரூபாய் வரை
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்தியா ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
தற்போது ஆயுஷ்மான் பாரத் திட்டம் மேற்கு வங்கம், ஒடிசா, ஆகிய மாநிலங்களவை தவிர பிற எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ உதவி
இது உலகின் மிகப்பெரிய அரசு நிதியில் இயங்கும் மருத்துவ உதவி திட்டம்மாகும்.
சிறப்பு அம்சங்கள் என்ன
இந்த திட்டத்தின் பலன்களை நாடு முழுவதும் மாற்றிக்கொள்ளலாம்.
குடும்பத்தின் அளவு, வயது, பாலினம், ஆகியவை அடிப்படையில் எந்த மாற்றங்களும் இல்லை.
மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டுமே (Inpatients) ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் முழு சலுகைகளும் கிடைக்கும்.
வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..!
Best Free medical treatment up to Rs 5 lakh புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், மூளை நோய்கள், சிறுநீரக பாதிப்பு, உள்ளிட்ட 26 பிரிவுகளில் 1669 மருத்துவ துறைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் முழு சிகிச்சை பெற முடியும்.
கொரோனா வைரஸ் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின்கீழ் சலுகைகள் வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை பிரீமியம் தொகை (pm cares) திட்டத்தில் இருந்து செலுத்தப்படும்.