Best gold investment plan 2021 in tamil
பிப்ரவரி 1 முதல் தொடங்குகிறது அரசின் அசத்தலான திட்டம் தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் இதுதான்.( Best gold investment plan 2021 in tamil)
ரிசர்வ் வங்கி அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கு 11 கட்ட அறிவிப்பினை அறிவித்துள்ளது. நம் நாட்டில் தங்கம் என்பது நமது கலாச்சாரத்துடன் கலந்துள்ள மிக விலை உயர்ந்த ஒரு உலகமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்திய மக்கள் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரும் விரும்பி முதலீடு செய்யப்படும் ஒரு இடமாக தங்கம் உள்ளது.
தினந்தோறும் மாறுபடும் தங்கத்தின் விலையை இணையதளம் அல்லது தொலைக்காட்சி வாயிலாக நாம் தெரிந்து கொள்வோம் ஆனால் நேரடியாக சென்று வாங்கும் பொழுது அதற்கு செய்கூலி சேதாரம் என்று தங்கத்தின் தொகை அதிகரிக்கும்.
நம்மிடம் பணம் இருந்தால் நாம் தங்கத்தில் முதலீடு செய்யலாம் மற்றும் செய்கூலி சேதாரம் தவிர்க்கலாம் அரசின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தாள்.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் முதலீடு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அனைத்து மக்களும் தங்கத்தை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட நமது அரசு தங்க பேப்பர் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதில் நீங்கள் முதலீடு செய்தால் செய்கூலி சேதாரம் தவிர்க்கப்படும் மற்றும் சிறிய தொகையாக வட்டி வீதம் வழங்கப்படும் இந்தத் திட்டத்துக்கு மக்களிடம் மிகப்பெரிய அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
எந்த துறையில் முதலீடு செய்தால் நமது பணம் பாதுகாப்பாக இருக்கும்.
2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 6 மாதங்கள் கட்டுப்பாடுடன் கூடிய கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.
இதனால் அனைத்து துறைகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது குறிப்பாக எரிபொருள் ,விமானசேவை போன்ற விலை உயர்ந்த சேவைகள் பூஜ்யம் என்ற நிலைக்கு வந்தது.
ஆனால் தங்க மட்டும் விலை உயர்ந்து கொண்டே இருந்தது காரணம் உலகத்தில் உள்ள பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தை சிறந்த முதலீடாக பார்க்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
இந்திய அரசின் நம்பிக்கையான முதலீட்டுத் திட்டமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள 80 சதவீத மக்கள் தங்கத்தை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதனால் பொருளாதாரம் மற்றும் அன்னியச் செலாவணி கையிருப்பில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனை உணர்ந்து கொண்ட நமது அரசு மக்களிடம் நம்பிக்கை மற்றும் முதலீட்டை பெறுவதற்கு இந்த தங்க பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது.
அறிமுகம் செய்த சிறிது காலத்தில் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது இந்த திட்டம் இப்பொழுது இந்தியாவில் சிறந்த தங்க முதலீடு திட்டமாக இந்த திட்டம் உள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை.
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தங்க பத்திரம் விற்பனையை மத்திய அரசு தொடங்கும் இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் தங்க பத்திரங்கள் விற்பனையை மத்திய அரசு தொடங்குகிறது தங்கத்தில் முதலீடு செய்ய காத்திருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இந்தத் திட்டத்தில் உள்ள சலுகையை பெறுவது எப்படி.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி தங்க பத்திரத்தை வாங்கிக் கொள்ளும் வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது மேலும் டிஜிட்டல் முறையில் தங்க பத்திரத்தை வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிராமத்து 50 ரூபாய் சலுகையை பெறமுடியும்.
11 கட்ட வெளியீடாக உள்ள இந்த தங்க பாத்திரத்தினை மக்கள் வாங்குவதற்கு பிப்ரவரி 5 2021 தேதி இறுதி நாளாகும் மற்றும் பிப்ரவரி 9ஆம் தேதி இதன் வெளியீட்டு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கப் பத்திரத்தின் விலை நிலவரங்கள்.
ஒரு கிராமுக்கு 4,912 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம் வரை வாங்கி வைத்துக்கொள்ளலாம் மற்றும் அறக்கட்டளை அல்லது நிறுவனங்கள் 20 கிலோ வரை வாங்கி வைத்துக் கொள்ள முடியும்.
Best 4 foods for Hair Growth in tamil
இந்த தங்கப் பாத்திரத்தில் நீங்கள் முதலீடு செய்தால் வருடத்திற்கு 2.5 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும் இந்த வட்டி விகிதம் உங்களுடைய தனிநபர் வருமானத்தில் சேர்க்கப்படும்.
அடுத்த விற்பனை எப்பொழுது தொடங்கும்.
இந்த ஆண்டின் முதல் விற்பனை
பிப்ரவரி 1 முதல் 5 வரை இந்த தங்க பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம் மற்றும் பிப்ரவரி 9ஆம் தேதி இதன் வெளியீடு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்டி யூனியன் பாங்க் 2021 ஆம் ஆண்டிற்கான பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட விற்பனை.
மார்ச் 1 முதல் 5 வரை இந்த தங்க பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம் மற்றும் மார்ச் 9ஆம் தேதி இதன் வெளியீடு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.