Best schemes made for girls in tamil 2023
பெண் குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் கல்வி முதல் திருமணம் வரையில் பல முக்கிய அம்சங்கள் இணைந்துள்ளது..!
இன்றைய அறிவியல் உலகத்தில் குழந்தை பிறந்த உடனே பெற்றோர்களின் ஒரே சிந்தனை பணத்தை சேமிக்க தொடங்கிவிட வேண்டும்.
குறிப்பாக பெண் குழந்தை எனில் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலையில் இன்றைய காலத்தில் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
குழந்தைகளின் கல்வி தொடங்கி,திருமணம் வரையில் பெரிய அளவில் செலவு செய்யும் நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
பெண் குழந்தைகளின் முதலீடுகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள் பெற்றோர்கள்.
இப்படி செய்யும் முதலீட்டு திட்டங்களில் அரசு திட்டங்களாக இருந்தால் அது மிக பாதுகாப்பானது.
பெண் குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது,அவற்றைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டம்
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இது ஒரு சிறந்த திட்டமாகும்.
பெண் குழந்தைகளை காப்போம் என்னும் திட்டமாகும் 2015 இல் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த திட்டமாகும்.
இதுவும் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம், குழந்தைகளின் கல்வி அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
பெண்களின் எதிர்கால நிதி தேவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்,இதன் மூலம் கல்வி கட்டணம்,பள்ளி சீருடைகள் மற்ற கல்வி செலவினங்களை செய்ய உதவிகரமாக இருக்கும்.
80சி பிரிவின் கீழ் வரி விலக்கு இருக்கிறது
திட்டத்தின் நோக்கம் நாட்டில் பெண்களின் நிலைமையை மேம்படுத்துவது,பெண் குழந்தை பாலின விகிதத்தில் சரிவை தடுப்பது.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பது நாட்டில் 10வயது வரை உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் இணைவதற்கு தகுதியானவர்கள்.
அவர்களின் பெயரில் வங்கி கணக்கு தொடங்குவது அவசியம், இந்த திட்டம் முற்றிலும் வரிவிலக்கு, பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை தொடங்கிய உடன் அதில் இருந்து எந்த தொகையும் கழிக்கப்படாது.
திட்டத்தில் இணைவதற்கு தேவையான ஆவணங்கள்
Best schemes made for girls in tamil 2023 பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் அடையாள சான்றிதழ் அல்லது சட்டபூர்வ பாதுகாவலரின் முகவரி ஆதாரம்.
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே கணக்கை தொடங்கும் நேரத்தில் இருந்து 21 வயதை நிறைவு பெற்றவுடன் கணக்கு முதிர்ச்சி அடையும்.
அவர் 18 வயதிற்கு பிறகு தான் உயர் கல்விக்கான நிதியை பெற முடியும்.
அவளுக்கு 21 போது அவரது திருமணத்திற்காக கணக்கில் இருந்த பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
Best schemes made for girls in tamil 2023 இது பெண்களுக்காகவே பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
இந்த திட்டத்தில் தற்போது வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது,இந்த திட்டத்தின் மூலம் கல்வி மற்றும் திருமண போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.