CBI registers case on Manipur nude video 2023
நிர்வாண ஊர்வலம் மணிப்பூர் பெண்களுக்கு நடந்த சகிக்க முடியாத கொடுமை சிபிஐ வழக்கு பதிவு அடுத்து அதிரடி இதுதான் நடக்கிறது..!
மணிப்பூரில் 2 குக்கி பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது.
இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அடுத்த அடுத்த நடைபெறவுள்ள அதிரடி முடிவுகள் பற்றி தகவல்கள் கசிந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது முதல்வரான பிரான்சிங் உள்ளார்.
இங்கு வசிக்கும் குக்கி மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர் இந்நிலையில் மைத்தேயி பிரிவு மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியில் சேர்க்க கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கு குக்கி இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் இது தொடர்பாக இரு தரப்பு மக்களிடையே ஏற்பட்ட கடுமையான மோதல்.
மே மாதம் 3ம் தேதி மிகப்பெரிய வன்முறையாக அந்த மாநிலத்தில் மாறியது, இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை, அதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கடந்த மே மாதம் 4ம் தேதி மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த இரண்டு பழங்குடியின மக்களை ஒரு கும்பல் அடித்து நிர்வாணப்படுத்தி.
ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள்,இது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஒரு அதிர்வலியை இந்திய முழுவதும் ஏற்படுத்தியது.
மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் இந்திய முழுவதும் இருந்து பெண்கள் மற்றும் இளைஞர்களின் இடையே மிகப்பெரிய ஒரு எதிர்ப்பு கிளம்பியது.
இந்தக் குற்றத்திற்கு உடனடியாக நீதி வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களில் ஆங்காங்கே மாணவர்களும் மக்களும் போராட்டங்களில் இன்னும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக 7 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக தற்போது மணிப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள 7 நபர்களை காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
அவர்கள் கொடுக்கும் தகவல்கள் மற்றும் வீடியோவில் இருக்கும் நபர்களை அடையாளம் கண்டுபிடித்து அடுத்தடுத்து மற்றவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்பது சிபிஐ முடிவு இது தவிர சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிடும் சிபிஐ அதிகாரிகள்,பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான, பாதிக்கப்பட்ட பெண்களிடம் நேரடியாக வாக்குமூலம் பெற உள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்தக் குற்றத்திற்கு மன்னிப்பு கிடையாது குற்றம் செய்யப்பட்டவர்கள் கடுமையான தண்டனை பெறுவார்கள் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எனது இதயம் கோபத்தால் நிரம்பி உள்ளது கண்டிப்பாக இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.
அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அதற்கான உரிய தண்டனை பெற்று தருவேன் என நரேந்திர மோடி ஆவேசமாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to secure your pan card..!
Pathira Pathivu some important details..!