consumer product price high increase 2022
அனைத்து பக்கங்களிலும் இருந்து விலை உயர்வு அறிவிப்பு நாள்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்ன நடக்கிறது இந்தியாவில்..!
ரஷ்யா, உக்ரைன் போர் மற்றும் சீனாவில் முழு ஊரடங்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆகியவற்றின் மூலம் உற்பத்திக்கான.
பல மூலப் பொருட்களில் சங்கிலி வினியோகம் தடைபெற்றது மட்டுமில்லாமல் அதிகப்படியான டிமாண்ட் காரணமாக விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதேபோல் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக அதிகரிக்க தொடங்கியது காரணத்தால் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை சமாளிக்க பொருட்களின் விலையில் இருந்து இடைவெளி முழுமையாக தீர்ந்துள்ள காரணத்தால்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சந்தைக்கு வரும் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கால சூழ்நிலை கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்தியாவின் வர்த்தக சந்தை மற்றும் மக்களுக்கு இப்பொழுது புதிய பெரும் சுமை உருவாகியுள்ளது, காரணம் விலை உயர்வு.
இதற்கு மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க வேண்டும் என்பதற்காக, விலை உயர்வின் தாக்கத்தை வாடிக்கையாளர்களிடம் சேர்க்கும் நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
கடுமையான சங்கிலித்தொடர் பாதிப்பு
இந்த விலை உயர்வின் மூலம் இந்திய சந்தையில் வர்த்தகம் குறைவது மட்டுமில்லாமல், சங்கிலித்தொடர் பாதிப்பு, உற்பத்தி, வேலைவாய்ப்பு, முதலீட்டுச் சந்தை, என பல வகையில் அனைத்து தரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக கட்டுமானத்துறை, நுகர்வோர், ஆட்டோமொபைல், என பல துறையில் விலை உயரும் காரணத்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த நுகர்வும் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
முன்னணி நிறுவனங்களின் நிலை என்ன
consumer product price இந்தியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களான சுசுகி, யுனிவர்சல், முதல் இந்திய நிறுவனமான ஏசியன் பெயிண்ட்,JSW Steel, உட்பட பல பார்மா நிறுவனங்கள்.
என அனைத்து தயாரிப்புகளின் விலையை சில சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
எரிபொருள் விலை நிலவரம் என்ன
consumer product price இப்பொழுது எரிபொருள் விலை என்பது தினந்தோறும் சிறிய அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது, இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம், உலக சந்தையில் நடக்கும் சிறுசிறு மாற்றங்கள் என மத்திய அரசு சொல்கிறது.
உற்பத்தில் துவங்கி போக்குவரத்துத்துறை வரையில் பல இடத்தில் பெட்ரோல், டீசல், பெரும் பங்கு வகிக்கும் காரணத்தால், தற்போது அனைத்து பொருட்களின் விலை சிறிய அளவில் உயர தொடங்கியுள்ளது.
அனைத்து பக்கத்திலிருந்து முக்கியமாக இந்த விலை உயர்வு உணவு பொருட்கள், காய்கறி, பழங்கள், என மக்கள் தினமும் அத்தியாவசியமாக பயன்படுத்தும்.
அனைத்து பொருட்களும் விலை உயர தொடங்கியுள்ளது, இதன்மூலம் சாமானிய மற்றும் ஏழை மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிப்பை உணர தொடங்கியுள்ளார்கள்.