covid-19 vaccine really safe in human body
கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு நமது உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன.(covid-19 vaccine really safe in human body)
கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முதலில் நமது உடல் எவ்வாறு நோயை எதிர்த்துப் போராடுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு புதிய வைரஸ் நமது உடலில் நுழைந்தவுடன் அதன் சந்ததியை பெருக்குவதற்கு வேலைகளை ஆரம்பித்து விடும் இதனை நோய்த்தொற்று என்கிறோம்.
இந்த படையெடுப்புகள் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பு தொற்றுநோயை எதிர்த்துப் போராட பல கருவிகளை பயன்படுத்துகிறது. ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உள்ளன அவை திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்கிறது.
மேலும் தொற்று நோய்க்கு எதிராக போராடும் வெள்ளை அணுக்கள் அல்லது நோய் எதிர்ப்பு செல்கள் உள்ளன. வெவ்வேறு வகையான வெள்ளை இரத்த அணுக்கள் வெவ்வேறு வழிகளில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது.

மேக்ரோபேஜ்கள் என்பது வெள்ளை இரத்த அணுக்கள் ,அவை கிருமிகளையும் இறந்த அல்லது இறக்கும் உயிரணுக்களையும் விழுங்கி ஜீரணிக்கின்றன.மேக்ரோபேஜ்கள் ஆன்டிஜென்கள் என்று அழைக்கப்படும்.
படையெடுக்கும் கிருமிகளின் சில பகுதிகளை விட்டுச் செல்கின்றன. உடல் ஆன்டிஜென்களை ஆபத்தானது என்று அடையாளம் கண்டு, அவற்றைத் தாக்க ஆன்டிபாடிகளைத் தூண்டுகிறது.
பி-லிம்போசைட்டுகள் தற்காப்பு வெள்ளை இரத்த அணுக்கள்.அவை மேக்ரோபேஜ்களால் எஞ்சியிருக்கும் வைரஸின் துண்டுகளைத் தாக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.
டி-லிம்போசைட்டுகள் தற்காப்பு வெள்ளை இரத்த அணுக்களின் மற்றொரு வகை. அவை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உடலில் உள்ள செல்களைத் தாக்குகின்றன.
ஒரு புதிய வைரஸ் உடலில் நுழைந்தால் அவற்றை எதிர்த்து போராட உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் ஏற்பட்ட நோய்த்தொற்றை தடுப்பதற்கு அனைத்து கிருமி-சண்டைகளுக்கு தேவையான கருவிகளை தயாரிக்கவும் பயன்படுத்தவும் பல நாட்கள் அல்லது வரங்களகலாம்.
நோய் தொற்றுக்கு பின்பு அந்த நபரின் நோய் எதிர்ப்பு மண்டலம் அந்த நோயிலிருந்து உடலை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி கற்றுக் கொண்டதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளும்.
மனித உடல் மீண்டும் அதே வைரஸை எதிர்கொண்டால் விரைவாக செயல்படும் ‘’மெமரி-செல்கள்’’ எனப்படும் சில டி-லிம்போசைட்டுகளை உடலில் வைத்திருக்கிறது.பழக்கமான ஆன்டிஜென்கள் கண்டறியப்படும்போது. பி-லிம்போசைட்டுகள் அவற்றைத் தாக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.
மனித உடலில் தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகிறது.

மனித உடலில் பல்வேறு வகையான நோய்களில் இருந்து பாதுகாப்பை வழங்க பல்வேறு வகையான தடுப்பூசிகள் வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன. ஆனால் அனைத்து வகையான தடுப்பூசிகளும் உடலில் மெமரி டி-லிம்போசைட்டுகள் மற்றும் பி-லிம்போசைட்டுகள் வழங்குகின்றன. அவை எதிர்காலத்தில் அந்த வைரஸை எவ்வாறு எதிர்த்து போராடுவது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும்.
நமது உடலுக்கு டி-லிம்போசைட்டுகள் மற்றும் பி-லிம்போசைட்டுகள் தயாரிக்க தடுப்பூசி போட்ட சில வாரங்கள் ஆகும். ஆகையால் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்க போதுமான நேரம் இல்லாததால் ஒரு நபருக்கு (COVID -19) தடுப்பூசி போட்ட பின்பும் (COVID -19) ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
(COVID-19) தடுப்பூசி போட்டு சில மாதங்கள் ஆன பின்பு ஒருவேளை கொரோனா நோய் தெற்று ஏற்பட்டால் நமது உடல் அந்த வைரஸ் உடன் எவ்வாறு சண்டையிட வேண்டும் என்பதை தடுப்பூசி மூலம் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பயிற்சி அளித்துள்ளோம்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இருப்புக் குறித்து மத்திய அரசு முக்கிய அறிக்கையை வெளியிட்டது.
இதனால் (COVID-19) வைரஸ் புகுந்த சில நாட்களில் காய்ச்சல் ஏற்பட்ட போது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் அந்த வைரஸ் உடன் கடுமையான சண்டையில் உள்ளது என்று அர்த்தம். கடைசியில் அந்த வைரஸை நமது உடல் வீழ்த்திவிடும்.
Sputnik v vaccine full details in tamil 2021
சில நேரங்களில் தடுப்பூசி போட்ட பின்பு நோய் எதிர்ப்பு சக்தியை கட்டி எழுப்பும் செயல்முறை காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் இயல்பானவை மற்றும் அது உடல் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதாகும்.