தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020(Dharmapuri jobs vacancy 2020 Quick apply)
தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு மாதங்களாக காலியாக இருக்கும் பணி இடங்களை நிரப்புவதற்கு தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்த காலியிடங்கள் 23. 6/11/2020 முதல் 8/12/2020 வரை இணையதளம் மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் இதற்கான கல்வித்தகுதி டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் மேலும் சம்பள விவரங்கள், வயது விவரங்கள், தேர்வு செய்யும் முறை, போன்றவற்றை இந்த கட்டுரையில் காணலாம்.
நிர்வாகம் : தர்மபுரி மாவட்டம்
மேலாண்மை : தமிழ்நாடு அரசு
பணியிடங்கள் : 23
தொடக்க தேதி : 06/11/2020
இறுதி தேதி : 08/12/2020
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம்
சம்பள விவரங்கள் : 35,400
வேலை விவரம் : இளநிலை வரை தொழில் அலுவலர்
வயது வரம்பு:
ஜூலை மாதம் 1ம் தேதி அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
கல்வித்தகுதி.
சிவில் இன்ஜினியரிங் டிப்ளோமா (Diploma in Civil Engineering) கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் இதற்கான கல்வியினை (Regular/ Part time) முழு நேர அல்லது பகுதி நேர படிப்பு முறையில் மட்டுமே முடித்திருக்க வேண்டும் தொலைதூர கல்வி முறை (Distance Education) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஊதியம்.
35,400 – 112,400 என்ற ஊதிய அட்டவணையில் அரசு நிர்ணயிக்கும் படிகளுடன்.
பதவியின் பெயர் / பணியின் தன்மை.
பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து முடித்தல் மற்றும் இதர அனைத்து திட்டப் பணிகளையும் மேற்பார்வையிடுதல்.
தேர்வு செய்யும் முறை.
எழுத்து தேர்வு
ஆவணங்கள் சரிபார்ப்பு
நேர்காணல் முறை
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் நன்மைகள் தமிழில் 2020.
விண்ணப்பிக்கும் முறை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுடன் இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் வளர்ச்சி பிரிவுக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி தர்மபுரி என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் 08/12/2020 அன்று மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்களை முழுவதும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் மற்றும் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்ற சான்றிதழ்கள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நேர்முகத்தேர்வு ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும் இடம் நாள் குறித்து அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.twitter