DMK executive committed suicide big news 2022
இந்தி திணிப்பிற்கு எதிராக கொதித்தெழுந்த திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை நடந்த உண்மையான சம்பவம் என்ன தீவிர விசாரணையில் காவல்துறை.
இந்தி திணிப்பிற்கு எதிராக சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அரசு இந்தி மொழியை பல்வேறு வழிகளில் திணித்து வருவதாக தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
தமிழக அரசு பல்வேறு போராட்டங்களையும் கண்டனங்களையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சிறிய கிராமத்தில் திமுக அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்த விவசாய அணி முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் தங்கவேல் கலந்துகொண்டார்.
அப்போது அவர் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என கடுமையான ஒரு கோரிக்கையை முன் வைத்தார்.
நிர்வாகிகள் தெரிவித்த தகவல் என்ன
அங்கிருந்த நிர்வாகிகளும் நிச்சயம் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்கள் பிறகு அனைத்து நிர்வாகிகளும் கலைந்து சென்றார்கள்.
அப்போது தங்கவேல் மட்டும் அங்கு இருந்ததாக தெரிகிறது அவர் அங்கிருந்த ஒரு பலகையில் மத்திய அரசு மோடி அரசு இந்தியை திணிக்காதே.
தாய்மொழி தமிழ் இருக்க கோமாளி மொழி இந்தி எதற்கு என எழுதி உள்ளார்.
அப்போது பக்கத்தில் இருந்த நபர்கள் அந்த பெரியவரிடம் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார்கள்.
அதற்கு அவர் ஹிந்தி திணிப்புக்கு எதிராக வாசகம் எழுதி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டார்கள்.
பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற நிர்வாகி
அப்போது திடீரென்று தங்கவேல் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு மக்கள் அங்கு ஓடி வருவதற்குள் தங்கவேலின் உடல் முழுமையாக எறிந்தது சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்த விபரீத முடிவு ஏன்
DMK executive committed suicide big news 2022 உயிரிழந்த முதியவர் தங்கவேல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிந்த திமுக நிர்வாகிகள் மருத்துவமனையில் ஏராளமானோர் திரண்டு உள்ளார்கள்.
DMK executive committed suicide big news 2022 முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இந்தி திணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி கலந்து கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டம் அடுத்தடுத்து மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்கள் இந்தியை திணிக்காதே வகையில் இருக்க வேண்டும் என தமிழக மக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.