EMV Chip Technology full details in tamil 2022
வங்கிகள் சிப் வைத்த ATM கார்டுகளை வழங்க என்ன காரணம்..!
சில ஆண்டுகளுக்கு முன்பு துணிக்கடை, ஹோட்டல், நகைக்கடைகள், சினிமா தியேட்டர்கள், மால்கள், கேலிக் கூத்துக்கள், மற்றும் சூப்பர் மார்க்கெட், போன்ற வர்த்தக நிறுவனங்களில் வாங்கிய பொருட்களுக்கு.
பணம் செலுத்த வேண்டி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு கொடுக்கும் போது அதனை அவர்கள் Payment Terminal என்னும் சாதனத்தில் பக்கவாட்டில் ஸ்வைப் செய்து பணம் பரிமாற்றம் செய்வார்கள்.
ஆனால் இப்பொழுது உங்களுடைய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்வதற்கு மாறாக Payment Terminal சாதனத்தின் முகப்பில் உள்ள ஒரு ஸ்லாட்டில் உள்ளே நுழைகிறார்.
அதுவும் சில மணித்துளிகளில் கார்டு பிராசஸ் செய்யப்பட்டு தேவையான பணம் உங்களது வங்கிக் கணக்கிலிருந்து அவர்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இப்பொழுது Payment Terminal சாதனத்தின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு இன்சர்ட் செய்வதற்கு என்ன காரணம் என்றால் கார்டில் பொருத்தப்பட்டுள்ள (EVM Chip Technology) தொழில்நுட்பம் மிக முக்கியமானதாக இருக்கிறது.
EVM Chip தொழில்நுட்பம் எதற்கு
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் தற்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு EVM Chip Card பொருத்தப்பட்ட புதிய ATM காடுகளை வழங்கி வருகிறது.
EVM Chip தொழில்நுட்பம் என்பது E-Visa, Rupay, மற்றும் Master, ஆகிய வங்கி அட்டை உற்பத்தி நிறுவனங்களால் புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.
எனவேதான் இந்த நிறுவன பெயர்களில் முதல் எழுத்துக்களைக் கொண்டு தொழில்நுட்பம் EVM Chip என்று அழைக்கப்படுகிறது.
இந்த EVM Chip அட்டைகளில் வாடிக்கையாளர்களின் தகவல்களுக்கு மேம்பட்ட ஒரு பாதுகாப்பை வழங்கும் சிறிய மைக்ரோ பிரஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது, இந்த தொழில்நுட்பத்தின் சிறந்ததாக இது இருக்கிறது.
EVM Chip Technology தொழில்நுட்பம் இந்தியா மற்றும் பல உலக நாடுகளுக்குப் புதிது என்றாலும், கடந்த 2000ம் ஆண்டின் முற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் இந்த EVM Chip Technology தொழில்நுட்பம் கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இப்போது வரை பயன்படுத்தி வரும் (Magnetic Region) என்ற கார்டுகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.
Magnetic Region Card பல நாடுகளில் இந்த வகையான கார்டுகளை பயன்படுத்தி வந்தாலும், அதில் பதியப்பட்டிருக்கும் தகவல்களை எப்படித் திருடலாம் என்பதை நன்றாக கற்றுக் கொண்டுள்ளார்கள் திருடர்கள்.
இதன் காரணமாக எளிமையாக போலியான கார்டுகளை தயார் செய்து அதிக அளவில் பண மோசடியில் ஈடுபடுகிறார்கள் திருடர்கள்.
ஆனால் இந்த கார்டுகளில் EVM பொருத்தப்பட்டுள்ளதால் பரிவர்த்தனையில் பாதுகாப்பு வழங்குவது மேலும் கிரெடிட் கார்டு குற்றங்களையும் இது குறைக்கிறது.
Magnetic Region Card எந்த வகை பாதுகாப்பு என்றால் அந்த வங்கிக் கணக்கை பற்றி முழு விவரங்களையும் Magnetized டைப்பிங்கில் மாறாத வடிவில் பதியப்பட்டிருக்கும்.
எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி திருடர்கள் இந்த வங்கி கணக்கில் முழு விவரங்களையும் பிரதி எடுத்து ஏற்கனவே போலியாக தயாரித்து வைத்துள்ள Magnetized டைப் கார்டுகளில் எளிதாக பகிர்ந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த EVM Chip Technology ATM தொழில்நுட்பத்தில் பொருத்தப்பட்டுள்ள கார்டில் அவ்வாறெல்லாம் செய்து விட முடியாது.
ஒவ்வொரு பணப்பரிவர்த்தனை போது அட்டை அசல் தன்மையை அட்டை வழங்கும் Dynamic Diagram தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளம் மூலமாகவோ.
கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புகள்..!
அல்லது Payment Terminal சாதனத்தின் மூலம் அல்லது இணையதளம் இல்லாத டேட்டா மூலம் பரிசோதனை செய்த பிறகே பரிவர்த்தனை நடக்கும்.
இது போல் போலியான கார்டுகளை உருவாக்குவது என்பது இயலாத காரியம்.
March get ready to pay more money 2022
அதேபோல் ஒவ்வொரு பணபரிவர்த்தனை போதும் இந்த கார்டில் பொருத்தப்பட்டிருக்கும் மைக்ரோசிப் ப்ராசஸ் மீண்டும் பயன்படுத்த முடியாத ஒரு தனித்தன்மையான பரிவர்த்தனை தரவுகளை உருவாக்கிவிடும்.
இதனால் திருடர்கள் ஓர் இடத்தில் நடைபெற்ற பரிவர்த்தனை தரவுகளைத் திருடி அடுத்த இடத்தில் பரிவர்த்தனை செய்ய முடியாது.