Gastric problem home remedy 8 best tips
வாயு தொல்லை நீங்க வீட்டு மருத்துவம் போதும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
நெஞ்செரிச்சல் ஏதோ குத்துவது போன்ற ஒரு சிறிய உணர்வு ஆசன வாயில் அடிக்கடி வாய்வு வெளியேறுவது கை, கால்கள், மரூத்துப் போவது போன்ற உணர்வு எதை சாப்பிட்டாலும் அப்படியே எரிச்சல் ஏற்படுவது.
வயிற்றில் கட கட வென சத்தம் வருவது, அடிக்கடி லேசாக தலை சுற்றுவது, போன்ற பல்வேறு வகையான உடல் உபாதைகள் பல்வேறு வகையான மக்களுக்கு இருக்கிறது.
இப்படி பல அறிகுறிகளும் அசௌகரியமும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், வீட்டுப் பெரியவர்களும், இருக்கும் இந்த வாய்வு தொல்லை நீங்க நீங்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
சீமை சாமந்தி டீ
சீமை சாமந்தி டீ பேக் இப்போது எல்லா வகையான சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது, அதை வாங்கி தண்ணீரில் தேனீர் தயாரித்து குடித்து வந்தால் வாயுத் தொல்லை வராமல் தடுக்கும் வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பேரிக்காய்
ஆப்பிளைப் போன்று பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் பேரிக்காயில் இருக்கிறது, நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்வு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம், அதுமட்டுமில்லாமல் உடலில் ஜீரண சக்தியை தூண்டும் செரிமானம் நன்றாக நடைபெறும்.
புதினா இலைகள்
புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது, வாய்வினால் அவதியுறும் போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும்.
புதினா எண்ணெயை வெந்நீரில் ஒருதுளி கலந்து குடித்து வந்தால் வாயு பிரச்சனை என்பது முழுவதும் நின்றுவிடும்.
மிளகு சூரணம்
கரும் மிளகாயை நன்கு அரைத்து பொடி செய்து 50 கிராம் எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி அந்த நீரை வடிகட்டி கால்டம்ளர் அளவு என 3 வேளை குடித்து வந்தால் வாய்வு தொல்லை முற்றிலும் நீங்கிவிடும்.
தேங்காய்
இந்த வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க தேங்காய் துருவலை நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு வரலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பால் குடிப்பதால் வாய்வுத்தொல்லை குணமாகிவிடும்.
வயிற்றில் இருக்கும் உடல் உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமாக வைக்கிறது, இதனால் உடலில் அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
வாழைப்பழம்
இந்த வாயு தொல்லைக்கு வாழைப்பழம் மிகச்சிறந்த பலனைத் தருகிறது, வாயுத் தொல்லை இருப்பவர்கள் அடிக்கடி வாழைப்பழத்தை சாப்பிட்டால் கட்டுப்படும்.
கல்லீரல் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்.
மசாலா பொருட்கள்
சீரகம், ஏலக்காய், சோம்பு, மூன்றும் ஒரு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது.
எனவே வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை மென்று வெறும் வாயில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Child Marriage Act full details in tamil 2022
பப்பாளி பழம்
இந்த வாயுத் தொல்லை ஏற்படும் சமயங்களில் பப்பாளி பழத்தை ஒரு துண்டு எடுத்து சாப்பிடுங்கள் இந்த வாயுத் தொல்லை உடனடியாக சரியாகிவிடும்.