Grama sabha meeting best tips 2023
தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் விவாதிக்கலாம் வாருங்கள் என்று மக்களுக்கு அழைப்பு..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வரவு செலவு கணக்கு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பற்றிய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளார்.
குடியரசு தினத்தன்று நடைபெறுகிறது
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
கூட்டம் நடைபெறும் இடம் நேரம் ஆகிய கிராம ஊராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.
வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிப்பு
கிராம ஊராட்சிகளில் தலைமை பொறுப்பு வகிக்கும் அனைத்து ஊராட்சி தலைவர்கள் அவர்களது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார்கள்.
ஜனவரி 26 ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் நடைபெறும்.
அப்போது வரவு செலவு கணக்குகள் வெளியீடு பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகளின் தேர்வு மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்கின்ற தலைப்புகளில் பொருட்கள் உள்ளன.
விவாதப் பொருள் என்ன
Grama sabha meeting best tips 2023 ஊராட்சிகளில் 2022 டிசம்பர் மாதம் வரை வரவு-செலவு அறிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.
தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்.
மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணிகள்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு போன்றவை குறித்து இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படும்.
நம்ம ஊர் கிராம சபை கூட்டம்
Grama sabha meeting best tips 2023 கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை நிகழ் நேரத்தில் கண்காணிக்கும் வகையில் நம்மகிராம சபை என்கின்ற கணினி தொலைபேசி மென்பொருள் மூலம் கிராமசபை நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று நடைபெறும் உங்கள் ஊர்கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.