Gramin Suraksha Yojana best scheme 2022
ரூ 50 முதலீடு செய்து ரூ 35 லட்சம் வரை பெறும் அஞ்சலகத்தில் சிறப்பான திட்டம்..!
இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் சிறப்பான சேமிப்பு திட்டத்தை பற்றி முழுமையாக பார்க்க போகிறோம், இந்தியாவில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது.
இருப்பினும் மக்கள் எப்பொழுதும் நம்பிக்கையுடன் பார்க்க முதலிடம் என்றால் அஞ்சலக சேமிப்பு திட்டம் தான், அஞ்சல் அலுவலகத்தில் பல்வேறு விதமான செயல்திட்டங்கள் நிறைந்துள்ளன.
அவற்றில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸ் கிராம சுரக்ஷா யோஜனா இது ஒரு பாலிசி திட்டமாகும்.
இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் மாதம் ரூபாய் 50 முதலீடு செய்வதன் மூலம் அதிகபட்சம் 35 லட்சம் ரூபாய் வரை உங்களால் பெற முடியும்.
இந்த சேமிப்பு திட்டத்தை பற்றி முழு தகவல்களையும் இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்.
அஞ்சலக கிராம சுரக்ஷா யோஜனா
அஞ்சலக கிராம சுரக்ஷா யோஜனா என்பது ஒரு முழு ஆயுள் திட்டமாகும், இது 5 வருட பாதுகாப்பு பிறகு எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இதன் மூலம் பாலிசிதாரர் 55, 58 அல்லது 60 வயது வரை குறைக்கப்பட்ட பிரீமியங்கல் மூலம் பயன் அடையலாம்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வயது
Gramin Suraksha Yojana best scheme 2022 கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் இணைவதற்கு குறைந்தபட்சம் வயது 19 முதல் அதிகபட்சம் 55 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் தொகை எவ்வளவு
Gramin Suraksha Yojana best scheme 2022 குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூபாய் 10,000 அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய் 10 லட்சம்.
இந்த திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடன் வசதி பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கிறது.
பாலிசிதாரர் 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்யலாம்.
5 ஆண்டுகளுக்கு முன் சரண்டர் செய்தால் இந்த திட்டத்தில் போனஸ் கிடையாது
பாலிசிதாரரின் 59 வயதுவரை என்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றலாம் பிரீமியம் செலுத்துதல் நிறுத்தப்பட்ட தேதி அல்லது முதிர்வு தேதியில் இருந்து ஒரு வருடத்திற்குள் மாற்றம் தேதி வராது.
பிரீமியம் செலுத்தும் வயது 55, 58 அல்லது 60 ஆக நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்
Gramin Suraksha Yojana best scheme 2022 ஒரு பாலிசிதாரர் இந்த கிராமம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் வெறும் 50 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், அதிகபட்சம் 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.
ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,515 பாலிசியில் முதலீடு செய்தால் அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ 50 பாலிசி முதிர்ச்சி அடைந்த பிறகு.
உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..!
அந்த நபர் 34.60 லட்சத்தை திரும்பப் பெறுவார், ஒரு முதலீட்டாளர் 55 ஆண்டுகளில் 31,60,000 முதிர்வு நன்மை தொகையை பெறுவார், 58 ஆண்டு காலத்திற்கு 33,40,000 முதிர்வு நன்மை தொகையை பெறுவார், மற்றும் 60 ஆண்டு காலத்திற்கு 34.60 முதிர்வு நன்மை தொகையை பெறுவார்.