How to get Mudra loan Full Details 2021
சிறு குறு தொழில் செய்ய முத்ரா திட்டத்தில் கடன் பெறுவது எப்படி…!
நம் நாட்டில் சிறு, குறு உற்பத்தி சேவை மற்றும் வியாபார சார்ந்த தொழில்கள் வளர வேண்டும் என மத்திய அரசு அதற்கு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அது மட்டுமில்லாமல் புதிய தொழில் முனைவோர்களை நாட்டில் உருவாக்க வேண்டும், தொழில் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும், குறிப்பாக ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் அன்னியச் செலாவணி அதிக அளவில் இருக்கவேண்டும்.
என பல்வேறு நோக்கங்களுக்காக குறிப்பாக தொழில்கல்வி படித்த இளைஞர்களை மையமாக வைத்து இதுபோல் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது.
இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் நீங்களும் பயன் பெறலாம் இந்த திட்டத்தில்.
ரூ.10,00,000/-வரை சொத்து பணயம் (Security) இல்லாமல் வங்கி கடன் பெற முத்ரா திட்டம் பற்றிய முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் தெளிவாக பார்ப்போம்.
இந்த திட்டத்தில் இணைய என்ன தகுதி வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
இந்த திட்டம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் MSME வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டதுதான். இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் நிதி நிறுவனம் (Micro Units Development and Refinance Agency) மூலம் நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.
முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி இல்லை அது ஒரு அரசின் சிறந்த திட்டம், இது அனைத்து வங்கிகள் மூலம் நாட்டில் இப்போது செயல்படுத்தப்படுகிறது.
இது முற்றிலும் சிறு குறு தொழில் நடத்தும் நிறுவனங்களுக்காக அதனுடைய வளர்ச்சிக்காக, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய திட்டம் ஆகும்.
இதனை நிதி அமைச்சர் நிதி 2015-16 ஆண்டில் வெளியிட்டார் தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவதே இதன் முக்கிய பணியாக இருக்கிறது.
நிதி 2015-16 ஆண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு நிதி திட்டத்தில் கடன் வழங்கியுள்ளது மத்திய அரசு.
இந்த சேவைகளை பெறுவது எப்படி
இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களுடைய தொழிலை மேம்படுத்தவும் விரிவுபடுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர், மற்றும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது தொழில் முனைவோர்களுக்கு.
சிசு (SHISHU)முத்ரா வங்கி திட்டம் – இந்த திட்டம் மூலம் RS,50,000 வரை கடன் பெற முடியும்.
கிஷோர் (KISHOR) முத்ரா வங்கி திட்டம் – இந்த திட்டம் மூலம் RS,50,000 முதல் RS,5,00,000வரை கடன் பெற முடியும்.
தருண் (Tarun) இந்தத் திட்டம் மூலம் குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
இந்தத் திட்டத்தில் கடன் பெற தகுதிகள்
10 லட்சத்திற்கு குறைவான தொகையில் கடன் தேவைப்படும் பண்ணை தொழில் உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு, பொதுவுடமை வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளின், மூலம் இந்தக் கடன்கள் வழங்கப்படுகிறது தொழில் முனைவோர்களுக்கு.
அனைத்து வகையான உற்பத்தி சேவை மற்றும் வியாபாரம் செய்யும் தொழில் முனைவோருக்கு, அனைவரும் தங்களுடைய தொழிலை மேம்படுத்திக்கொள்ள இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனம் வாங்குவது, முடி திருத்தும் நிலையம் வைப்பது, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை விரிவுபடுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி மற்றும் பழ கடைகள், துணிக்கடைகள், கோழி பண்ணை, மாடு வளர்த்தல், மீன் பண்ணை, தேனீ வளர்த்தல், பால்பண்ணை தொழில்,பேக்கரி கடை விரிவுபடுத்துதல், ஏஜென்சி வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவினைக் கலைஞர், உற்பத்தி தொழில், சாலை அமைத்தல் சேவை அளித்தல், புதிய வீடு கட்டுவதற்கு சேவை அளித்தல், என அனைத்து புதிய மற்றும் நடைபெறும் நிறுவனங்களுக்கு இதில் கடன் பெற முடியும்.
நீங்கள் இதில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்னவென்றால், ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் எப்பொழுதும் முன்வருவதில்லை.
அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கு அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே, கடன் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
கடன் வங்கிகள் மூலம் பணமாக கிடைக்காது அதற்கு பதிலாக பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி, என அனைத்திற்கும் அதன் விற்பனையாளர் விலைப்பட்டியலை (Quotation) வங்கிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும், அதன் அடிப்படையில் மட்டுமே வங்கிகள் கடன் கொடுக்கும்.
நீங்கள் இந்த திட்டத்தில் கடன் பெற வேண்டும் என்றால் சரியான தொழில் கடன் தேவைகளை நீங்கள் வங்கிகளுக்கு நிரூபிக்க வேண்டும், அப்போதுதான் வங்கி மேலாளர் இதுகுறித்து முடிவு எடுப்பார்.
உங்களுடைய சொந்த செலவு, வீடு கட்டுதல், கல்யாண செலவு, போக்குவரத்து செலவு, ஆடம்பர செலவுகளுக்கு, இந்த திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்புகள் இல்லை.
கடன் பெற நீங்கள் செய்ய வேண்டியவை
இந்த திட்டத்தில் கடன் பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால் உங்கள் அருகில் உள்ள வங்கிக்கு சென்று விண்ணப்பப்படிவம் பெறலாம்.
PMMY Application Form என்ற இணையதளம் மூலம் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் வீட்டிலிருந்து.
வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம், அதற்கான தகுதியை வங்கி மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்ய முடியும், முடிவு செய்வதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது.
நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த திட்டம் மூலம் எந்தவிதமான அரசு மானியமும் தொழில் முனைவோர்களுக்கு வழங்குவது கிடையாது, இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே.
இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது மத்திய அரசால்.
நீங்கள் வாங்கும் கடனை 5 வருடங்கள் வரை திருப்பி செலுத்தலாம் மாதத் தவணைகள் EMI மூலம் அதனை வங்கிகள் கணக்கிட்டு அறிவிக்கும் உங்களுக்கும் மற்றும் மத்திய அரசுக்கும்.
நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடைபெறும் பொழுது, அதனை மேலும் விருத்தி செய்ய அல்லது நடைமுறை மூலதன பெற வங்கிகள் தொடர்ந்து உங்களுக்கு கடன்கள் வழங்கும்.
ஏற்கனவே தொழிலை வெற்றிகரமாக நடத்தும் தொழில்முனைவோருக்கு இந்த திட்டத்தில் கடன் வழங்கும் முடியும் ஆனால் அவர்களின் மீது எந்தவித வங்கியிலும் வாராக்கடன் அல்லது காசோலை மோசடி இருக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தில் நீங்கள் கடன் பெற வேண்டும் என விரும்பினால் எந்தவிதமான சொத்துப் பிணையம் மற்றும் தனி நபர் ஜாமீன் தேவையில்லை 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற.
ஒரு வங்கி கிளை ஆண்டுக்கு குறைந்தபட்சம் 25 நபர்களுக்கு இந்த முத்ரா கடன் திட்டத்தில் கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு அழுத்தமாக தெரிவித்துள்ளது.
ஆனால் அதிகபட்சம் எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் வங்கி மேலாளர் நினைத்தால் கடன் வழங்க முடியும்.
அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம் குறிப்பாக உங்களுக்கு எந்த வங்கியில் வங்கிக் கணக்கு உள்ளதா அந்த வங்கியின் மூலமாக கடன் பெற முடியும்.
கடன் வழங்கும் வங்கிகள் விவரங்கள்
25 Non Banking Financial Companies (NBFCS)
36 Microfinance Institutions (MFIs)
Local co-operative banks
17 Private sector banks
27 Public sector banks
31 Regional Rural Banks (RRBs)
முத்ரா திட்டத்தில் கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்
உங்களுடைய அடையாளச் சான்று
இருப்பிடச் சான்று (சமீபத்தியது) தொலைபேசி ரசீது, மின்சார கட்டண ரசீது, வீட்டு வரி ரசீது,
புதிதாக எடுத்த புகைப்படம்.
இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது
விநியோகஸ்தர் விவரங்கள்.
தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் அதற்கான உரிமம்.
சாதிச்சான்று.
உங்கள் ஆயுசுக்கும் தலைமுடி பிரச்சனை வராது
இந்த திட்டத்தின் கடன் அட்டை
இந்த திட்டத்தில் நீங்கள் கடன் பெற தகுதியான நபர் என வங்கி மேலாளர் முடிவு செய்தால், உங்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுப்பார், அந்த அட்டையை நீங்கள் உங்கள் தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தலாம்.
Click here to view our YouTube channel
கையில் ரொக்கமாக பணம் கண்டிப்பாக இந்த திட்டம் மூலம் எந்த ஒரு தொழில் முனைவு வரும் பெற முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடையாள அட்டை மூலம் மட்டுமே தேவையான மூலப் பொருட்களை வாங்க முடியும்.
PPF loan you can get loan at 1 interest rate
இந்த திட்டத்தினை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள www.mudra.org.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.