How to link Aadhaar with tneb best 5 tips
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைப்பது கட்டாயம் உங்களது சந்தேகங்களுக்கு முழு விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது..!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் தெரிவித்தது அதற்கு சிறப்பு முகாம்களையும் அமைத்தது.
எனினும் இது தொடர்பாக பல நபர்களுக்கு தொடர்ந்து சந்தேகங்கள் இருக்கிறது,இதற்கான முழு தகவல்களை நீங்கள் இந்த கட்டுரையில் காணலாம்.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கிறது.
இது தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளது.
சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது
மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும்.
பொது மக்கள் தங்கள் மின்இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இதன் மூலம் இணைத்துக் கொள்ளலாம் என்றும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை இணைப்பது எப்படி
காலை 10:30 மணி முதல் மாலை 5:15 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் இதில் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின்சார வாரியங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது, சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
இணையதளம் மூலமும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்சார வாரியம் சிறப்பு இணையதளத்தை தொடங்கி உள்ளது.
இணையதளத்தில் யாரெல்லாம் இணைக்க வேண்டும் என்பதற்கான முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன அதன் விவரத்தை காணலாம்.
என்னென்ன நடைமுறைகள் உள்ளன
ஆதார் எண்ணை இணையதளத்தில் இணைக்க வேண்டும் என்றும் விரும்பும் நபர்கள் முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அந்தப் பக்கத்தில் சென்ற உடன் உங்கள் மின் இணைப்பு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
அதற்கு பிறகு உங்களுடைய மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஒரு ஓடிபி(OTP) வரும்.
அந்த ஓடிபி(OTP) பதிவு விட்ட பிறகு ஆதார் எண் என்று கேட்கப்படும் அதில் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
அடுத்த கட்டத்தில் ஆதார் கார்டு நகல் இமேஜ் வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வளவு தான் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துவிடும்.
கட்டாயம் அனைவரும் இணைக் வேண்டும்
How to link Aadhaar with tneb best 5 tips வீட்டு மின் இணைப்பு, விவசாயம், குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள், விசைத்தறி, கைத்தறி நுகர்வோர்கள், என மானியம் பெறுபவர்கள் அனைவரும் கட்டாய இணைக்கவேண்டும்.
தொழிற்சாலைகள் தொழில் நிறுவனங்கள் இணைப்பது கட்டாயமில்லை.
How to link Aadhaar with tneb best 5 tips பிறகு நீங்கள் தான் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைக்கு இருக்கிறீர்கள் மின் இணைப்பு யார் பெயரில் உள்ளது என்ற விவரங்கள் கேட்கும்.
அதில் உங்களுக்கு பொருத்தமான விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டும், அதன்பிறகு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான ஒரு குறுஞ்செய்தி தோன்றும்.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஆதார் எண் எப்படி இணைக்க வேண்டும்
How to link Aadhaar with tneb best 5 tips வாடகை வீட்டில் இருப்பவர்கள் தங்கள் இருக்கும் வாடகை வீட்டில் உள்ள மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் எந்த மாற்றமும் ஏற்படாது.
யார் என்ற விவரத்தை மட்டுமே இந்த விவரம் பெறப்படும் வீட்டின் உரிமையாளர் பெயரில் மட்டுமே மின் இணைப்பு இருக்கும்.
மின் இணைப்பு எண்ணில் பெயரை வீட்டு உரிமையாளர் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.
வாடகைக்கு வசித்தவர் வேறு வீட்டிற்கு சென்று விட்டால் புதிதாக வருபவர்கள் ஆதார் எண் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு எப்படி
எத்தனை இணைப்புகள் இருந்தாலும் ஒரு ஆதார் எண்ணை கொடுக்கலாம் இதனால் இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் தடைபடாது.
How to link Aadhaar with tneb best 5 tips சலுகை பெறுபவர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் பெயரில் இருந்தால் மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண்ணை யார் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
கட்டணத்தை எப்படி செலுத்த வேண்டும்
How to link Aadhaar with tneb best 5 tips ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஆனால் இணையதளத்தில் செலுத்த வேண்டுமென்றால் கட்டாயம் ஆதார் எண் இணைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
அதுபோக விசைத்தறி, கைத்தறி, இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.