கொரோனா வைரஸ்ன் மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்(How to protect children from the 3 wave corona)
இந்தியாவில் கொரோனா வைரஸ்ன் இரண்டாவது அலையின் கொடூர தாக்கத்தை அனுபவித்து வரும் இந்திய மக்கள் அதனுடைய மூன்றாவது அலை வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் மூன்றாவது அலை வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் மேலும் இந்த மூன்றாவது அலை குறிப்பாக குழந்தைகளை மட்டும் பெருமளவில் தாக்கும் என அபாய மணி அடிக்கப்படுகிறது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குழந்தைகளை தாக்காமல் இருப்பதற்கும் ஒரு வேளை தாக்கினாலும் கூட குழந்தைகளுக்கு முறையான சிகிச்சைகள் பராமரிப்பு மூலம் எளிதில் குணப்படுத்த முடியும் என மத்திய அரசு வெளியிட்டு இருக்கின்ற அந்த விதிமுறைகளை பின்பற்றினால் போதும்
கண்டிப்பாக ரெம்டெசிவிர் ஊசி போடக்கூடாது
இந்தரெம்டெசிவிர் ஊசி 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் மற்றும் குழந்தைகளுக்கு போடக்கூடாது அப்படி போட்டால் அதிக பாதுகாப்பு இந்த ஊசி மூலம் கிடைக்காது
அந்த மருந்தின் செயல் திறன் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் ஊசியை போடக்கூடாது என்று சுகாதார பணிகள் இயக்குனரகம் மருத்துவர்களுக்கு அறிவுரை செய்துள்ளது
குழந்தைகளுக்கு கூடவே கூடாது
குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று இருக்கும் பொழுது கண்டிப்பாக HRCT ஸ்கேன் எடுக்கும்மாரு அறிவுறுத்தும் போது மருத்துவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்
பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளையும் சிடி ஸ்கேன் எடுக்க வற்புறுத்தக்கூடாது ஏனெனில் குழந்தைகளின் மார்பில் சிடி ஸ்கேன் எடுப்பதால் கிடைக்கும் கூடுதல் தகவல்கள் மருத்துவர்கள் எடுக்கும் மருத்துவ சிகிச்சையை முடிவுகளில் சிறு சிறு பாதிப்புகளை ஏற்படுத்தும் இதனால் முற்றிலும் மருந்தின் தீவிரம் மற்றும் உடலின் ஒத்துழைப்பு குறைந்துவிடும்
மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் கவனமாக இருக்க வேண்டும்
இளைஞர்களுக்கு 90% நோய்த்தொற்று அறிகுறி இல்லாமலே இருந்தது குழந்தைகளுக்கு நோய்த் தொற்றின் அறிகுறி இல்லாத போது அல்லது மிதமான நோய் தொற்று இருக்கும் பொழுது ஸ்டெராய்டு களை பயன்படுத்தினால் இது மோசமான விளைவுகளையும் கடுமையான உடல் உபாதைகளையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிடும் ஆகவே இந்த நிலையில் ஸ்டெராய்டுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது
ஒருவேளை வைரஸின் தன்மை தீவிரமாக அல்லது மிதமான அளவில் இருக்கும் பொழுது தலைமை மருத்துவரின் முறையான பரிசீலனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு ஸ்டெராய்டு களை பயன்படுத்தலாம் தனிநபர்கள் தாங்களாகவே ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்
இந்தியாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கருப்பு பூஞ்சை எனும் கொடிய வைரஸ் தாக்கியுள்ளது இதற்கு ஸ்டெராய்டுகள் பயன்படுத்தியது முக்கியமாக அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
அறிகுறி இல்லாத குழந்தைகளுக்கு
வைரஸ் அறிகுறி இல்லாத குழந்தைகளுக்கு என்று தனிப்பட்ட அல்லது சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் இதுவரை இல்லை அவர்கள் கொரோனா வைரஸ் காலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்
முக கவசம் அணிவது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பொதுவெளியில் கடைபிடிக்க வேண்டும் இதையெல்லாம் விட சத்தான உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரத்திற்கு மேல் தூங்க வேண்டும்
சூடான உப்பு தண்ணீர் அல்லது பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளலாமா
லேசன கொரோனா தொற்று தென்பட்டால் காய்ச்சல் மற்றும் தொண்டை கரகரப்பு இருந்தால் குழந்தைகளுக்கு ஒவ்வொரு 4 மணி முதல் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை 10-15 மிகி அல்லது கிகி பாரசிட்டமால் மருந்து கொடுக்கலாம்
அதேநேரத்தில் தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருந்தாள் குழந்தைகளுக்கு சூடான தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து வாய் கொப்பளிக்க செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது
மேலும் மிதமான பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் கொடுப்பதற்கு ரெடியாக இருக்க வேண்டும்
வீட்டில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
Pulse Oximeter ஒன்றை வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முதலில் 6 நிமிட நடை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை பரிந்துரைக்கப்படுகிறது
இது ஒரு எளிய சுலபமான பயிற்சி ஆகும் இதன் மூலம் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை தூண்டி விடக்கூடிய பயிற்சியாகும் இது ஹைபோக்ஸியாவை தூண்டுகிறது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
Pulse Oximeter மீட்டரை குழந்தைகள் விரலில் மாற்றி விட்டு அவர்களை 6 நிமிடங்களுக்கு தொடர்ந்து நடக்கச் சொல்லுங்கள் இதன் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவை சரியாக தெரிந்து கொள்ள முடியும் மேலும்
இந்திய ராணுவம் 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது
மத்திய அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தால் மூன்றாவது அலையிலிருந்து உங்களுடைய குழந்தைகளை எளிதில் பாதுகாக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்