ICMR issues covid-19 vaccine pregnant women
கர்ப்பிணிப் பெண்கள் covid-19 தடுப்பூசி போடலாமா மத்திய அரசு என்ன சொல்கிறது தெரியுமா(ICMR issues covid-19 vaccine pregnant women)
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதல் இன்றுவரை அதனுடைய கோரத்தாண்டவத்தை இந்த உலகிற்கு காட்டி வருகிறது உலகிலுள்ள பல முன்னணி மருந்து நிறுவனங்கள் முதல் விஞ்ஞானிகள் வரை இந்த வைரஸை எப்படி அழிப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் விழிபிதுங்கி வருகிறார்கள் காரணம் இந்த வைரஸ் மிக விரைவாக உருமாற்றம் அடைந்து வருவதற்கு முதன்மையாக உள்ளது
தற்போது உலகிற்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசி மட்டுமே இந்தியாவில் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இந்த வைரஸ்க்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆனால் அவசர கால பயன்பாட்டிற்கு 2 தடுப்பூசிகள் மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது அந்த தடுப்பூசிகள் நல்ல பலன்கொடுத்து வருகிறது இந்திய மக்களுக்கு
இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்தாலும் இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் இந்த வைரஸ்க்கு எதிராக சிறப்பாக உள்ளது வரும் காலங்களில் இந்தியாவில் மீதமிருக்கும் தடுப்பூசிகளும் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெறப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் மேலும் ரஷ்யா அமெரிக்கா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளும் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதற்கு அவசரகால அடிப்படையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
தடுப்பூசிகள் குறைந்தது 18 வயது முதல் உள்ள நபர்கள் மட்டுமே செலுத்தப்படுகிறது இதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது
குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் கர்ப்பிணி பெண்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் இதனால் இவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என்பது மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய சூழ்நிலை நிலவுகிறது இப்பொழுது அதற்கான ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிடப்பட்டுள்ளது
இந்தியாவில் இப்பொழுது நடைமுறையில் இருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளும் இதுவரை கர்ப்பிணி பெண்களிடம் பரிசோதனை செய்யவில்லை என்பதால் இந்திய அரசு இவர்களுக்கு இந்த தடுப்பூசியை பரிந்துரைக்காமல் இருந்தது
MOST READ கொரோனா குணமடைந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்தி
இனி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என ICMR டாக்டர் பலராமன் பார்க்கவா தெரிவித்துள்ளார் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இதனால் கர்ப்பிணி பெண்கள் தயக்கமின்றி தடுப்பு செலுத்திக் கொள்ளலாம் என அவர் அறிவித்துள்ளார்
இந்தப் பிரச்சினைகள் இருந்தால் திருமணமானவர்களுக்கு
கடந்த ஜூன் 25ஆம் தேதி அன்று மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மருத்துவமனையில் குறைந்தது 30 நிமிடங்கள் கட்டாயம் கண்காணிக்க பரிந்துரைக்கப்படுகிறது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
கர்ப்பகாலத்தில் நோய் தொற்றினை COVID-19 தடுப்பூசியும் தொடர்புடைய நன்மைகள் மற்றும் தடுப்பூசிகள் உடன் தொடர்புடைய சிக்கல்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் தடுப்பூசி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
covid-19 vaccine effectiveness against Delta
இப்பொழுது கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டாலும் கரு மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி நீண்டகால பாதகமான எதிர் விளைவுகள் மற்றும் பாதுகாப்பு இன்னும் நிறுவப்படவில்லை என்பதை கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் முழுமையாக தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது