India first satellite Best tips in tamil 2023
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் பற்றிய சில தகவல்கள்..!
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா இந்த செயற்கைக்கோள் 1975ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சோவியத் யூனியனில் இருந்து வானில் செலுத்தப்பட்டது.
இந்தியாவில் வானியல் துறையில் புகழ்பெற்ற ஆரியபட்டா என்பவரின் நினைவாக இந்த செயற்கைகோளுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.
ஆரியபட்டா செயற்கைக்கோள் விண்வெளி வானியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டு பூமியின் காற்று மண்டலத்தில் இது பிப்ரவரி மாதம் 11 1992 இல் மீளவும் வந்தது.
இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கென சுமார் 5 கோடி ரூபாய் இந்திய அரசால் செலவிடப்பட்டது,இதனை உருவாக்க 250 பொறியாளர்கள் 26 மாதங்கள் உழைத்தார்கள்.
இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து சுமார் 695 கிலோமீட்டர் உயரத்தில் அமையுமாறு நிலை நிறுத்தப்பட்டது.
India first satellite Best tips in tamil 2023 இது உலகை ஒரு முறை சுற்றிவர 96.6 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது,ஒரு நாளைக்கு 15 சுற்றுகள் விதம் உலகை சுற்றி வந்தது இதன் சராசரி வேகம் வினாடிக்கு 8 கிலோமீட்டர் ஆகும் இதன் இயக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே.
இந்த செயற்கைக்கோள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, சோவியத் யூனியனின் உதவியுடன் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி அரியப்பட்ட செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது இதுவே இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆகும்.
இதன் எடை 360 கிலோ கிராம் சோவியத் யூனியனின் ரஷ்யாவின் ராக்கெட் (கபுஸ்டின் யார்) Kapustin Yar மூலம் ஏவுதலத்தில் இருந்து கொஸ்மோஸ் மூன்றாம் ஏண் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டது.
India first satellite Best tips in tamil 2023 இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டு வெறும் 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. செயற்கைக்கோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதியில் பழுதானதால் செயற்கைக்கோள் தொடர்பு செயல்படாமல் போனது.
ஆர்யபட்டா செயற்கைக்கோள் இந்திய வானிலை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது, இதற்காக பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் மாற்றம் செய்யப்பட்டு தரைக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது.
ஆரியபட்டாவின் வெற்றியை நினைவு கூறும் விதமாக அப்போதைய சோவியத் யூனியன் அரசு சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.
இந்தியா இன்று விண்வெளி ஆராய்ச்சி துறையில் தனித்து விளங்குகிறது செவ்வாய் கிரகத்திற்கு முதல் முறையில் செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றது.
அடுத்தகட்ட விண்வெளி வளர்ச்சித்துறையில் மனிதர்களை விண்ணுக்கும் செலுத்த பணி இப்பொழுது வேகமாக நடந்து வருகிறது.