insurance companies announced new rules 2022
insurance companies announced new rules 2022
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு புதிய கட்டுப்பாடு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிவிப்பு..!
இந்த நோய் தொற்று இந்தியாவில் பல்வேறு வகையான முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தற்போது புதிய கட்டுப்பாடுகளையும் மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளன.
இதனால் இன்ஷூரன்ஸ் எடுத்த நபர்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக இது இருக்கிறது.
இந்த நோய் தொற்றுக்கு பின்பு இந்திய மக்கள் மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வாங்குவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் திடீரென அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புதிதாக டெர்ம் இன்சூரன்ஸ் வாங்கும் நபர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அறிவித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை கட்டுப்பாடுகளின் படி கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் டெர்ம் இன்சூரன்ஸ் கட்டாயம் வாங்க வேண்டும் என்றால்.
குறைந்தது 90 நாட்கள் அதாவது 3 மாதம் காத்திருக்க வேண்டும் இதோடு சில முக்கிய மருத்துவ சோதனை செய்து அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு படிவம்
இது மட்டுமில்லாமல் டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் நபர்கள் அனைவரும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த படிவத்தை பூர்த்தி செய்து.
இன்சூரன்ஸ் நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும் அதன் பின்னர் தான் டெர்ம் இன்சூரன்ஸ் அளிக்கப்படும் என ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.
கட்டாயம் 90 நாட்கள்
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தீவிரமும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை.
பொது காப்பீட்டு நிறுவனங்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்க விருப்பம் முதல்.
மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்துள்ளது.
மாதந்தோறும் பென்ஷன் வேண்டுமா எல்ஐசி ஜீவன்
புதிய அறிக்கையில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது
பிளான் இல்லாதவர்களுக்கு புதிய டெர்ம் பிளான் வாங்கும்போது மற்ற படிவங்களை நிரப்பும் பொழுது நோய் தொற்று குறித்து படிவத்தையும் கட்டாயம் நிரப்ப வேண்டும் என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Salman Meen amazing health benefits list 2022
மேலும் கடந்த 90 நாட்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும் உறுதி செய்து விட வேண்டும்.
எக்ஸ்ரே கட்டாயமாக்கப்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்பு எக்ஸ்ரே உடன் பல மருத்துவ சோதனைக்கான ஆவணங்களையும் கட்டாயம் அளிக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஏற்பட்டால்தான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தற்போது டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை அளிக்கிறது.