Jallikattu related case details Big news 2022
ஒரு மாட்டின் மீது பலர் விழுவது ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட்டில் நடந்த கடும் வாதம்..!
கடும் சிக்கலில் திரு ஸ்டாலின் அவர்கள் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் ஆட்சி பறிபோகும்.
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப் பட்டது.
கடந்த 2011ம் ஆண்டு காட்சி விலங்குகள் பட்டியலில் சிங்கம் புலி சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளுடன் விவசாயிகளுக்கு பயன்படுத்தப்படும் காளைகள் சேர்க்கப்பட்டது.
இதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடை முக்கிய காரணமாக அமைந்தது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காட்சி விலங்குகள் பட்டியலில் உள்ள விலங்குகளைப்.
பழக்கி பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்று வைக்கக்கூடாது மேலும் மிருகவதை தடுப்பு சட்டத்தையும் சுட்டிக்காட்டி ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
ஜல்லிக்கட்டுக்கு போராடிய தமிழகம்
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அடிபணிந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் இதற்கான சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று ஜல்லிகட்டு முறையாக கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்து வந்தது.
ஆனால் இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய ஒரு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஏனென்றால் பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கூடாது என திடீரென்று வழக்கு தொடர்ந்துள்ளது.
முக்கியமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது
ஜல்லிக்கட்டு மட்டுமின்றி மகாராஷ்டிராவில் நடைபெறும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கும் தடை கோரிய வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை 2018 முதல் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை நேற்று முதல் வழக்கு விசாரணை தொடங்கியது,முதல் நாளான நேற்று வழக்கு தொடர்பாக பல்வேறு காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
பீட்டா வைத்த முக்கியமான வாதம் என்ன
இந்த நிலையில் 2-வது நாளாக இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி ஆஜராகினர்.
ஜல்லிக்கட்டு என்பது ஒரு மாட்டின் மீது ஏராளமான இளைஞர்கள் விழுந்து அதனை அடக்க முயல்வது.
இதில் ஏராளமான மாடுகள் காயம் அடைவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கருத்தை முன்வைத்தது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது பிரமாண பத்திரத்தில் கூடாத விஷயங்கள் எல்லாம் புதிது புதிதாக இப்பொழுது தெரிவிக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை கோரிய வழக்கில் தமிழ்நாடு, கர்நாடகா,மகாராஷ்டிரா, மாநிலங்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளது.
நடந்து வரும் வாதங்கள் என்ன
Jallikattu related case details Big news 2022 ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தால் பாரம்பரிய கலாச்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
அதுமட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தால் மறுபடி மிகப் பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
Jallikattu related case details Big news 2022 ஏனென்றால் மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவாக இருக்கிறார்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என மக்கள் எப்பொழுதும் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு பயன்படுத்தப்படும் காளைக்கு எந்த ஒரு துன்புறுத்தலும் நடைபெறுவதில்லை.