Jayalalithaa property list handed over to court
சொத்துக்குவிப்பு வழக்கு ஏலம் விட வேண்டிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு..!
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் சொத்து பட்டியல் பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்,இந்த வழக்கு விசாரணை சுமார் 18 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இதில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது இதையாடுத்து.
ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் நிதியை சொத்து குவிப்பு வழக்கிற்கு.
செலவிட்ட தொகையை அரசு ஈடு செய்ய வேண்டும் என பெங்களூர் மாநகர உரிமையாளர் நீதிமன்றத்தில்,சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது,இந்த நிலையில் மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மறுபடியும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் செல்வி ஜெ ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனு சரியானது.
உடனடியாக கர்நாடக அரசும் நீதித்துறையும் சிறப்பு வழக்கறிஞரை நியமித்து,செல்வி ஜெ ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களையும் ஏலம் விட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
செல்வி ஜெ ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன?
செல்வி ஜெ ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வழக்கறிஞர் கிரண் ஜாவாலியா என்பவரை கர்நாடக அரசு நியமனம் செய்தது.
இந்த நிலையில் தான் நரசிம்ம மூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் செல்வி ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுவது தொடர்பான மனு விசாரணைக்கு வந்த போது தங்கம்,வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் பதித்த.
நகைகள் என சுமார் 30 கிலோ கர்நாடகா அரசின் கருவூலத்தில் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை தொடங்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் உள்ள ஜெயலலிதாவின் மற்ற பொருட்களை சட்டப்படி விரைந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சொத்து குறிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் இருந்து வைரம்,முத்து உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகள் 7 கிலோ வெள்ளி பொருட்கள்.
11,344 பட்டுப்புடவைகள் 44 ஏசிகள் 91 வாட்ச்சிகள் 27 வால் கிளாக்குகள் 146 பர்னிச்சர்கள் 750 ஜோடி காலனிகள் 250 சால்வைகள் என 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சொத்து குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய ஜெயலலிதாவின் சொத்து பட்டியலை பெங்களூரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஒப்படைத்தனர்.
ஜெயலலிதா,சசிகலா,சுதாகரன்,இளவரசி முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணத்தின் தற்போதைய மதிப்பு குறித்து அறிக்கை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் ஆயிரக்கணக்கான சேலைகள்,காலணிகள் கைக்கடிகாரங்கள் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட சொத்து பட்டியலில் இல்லை.
சட்ட விரோத சொத்து பட்டியலில் சேலைகள்,காலணிகள் இல்லாததால் அவற்றை ஏலம் விட உத்தரவிட முடியாது என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஆர்ஐடி ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி பெங்களூர் நீதிமன்றம் பதிலளித்துள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
tn rs 1000 scheme 63 lakhs applicants rejected