Jayalalitha’s death useful some tips 2022
ஜெயலலிதா முன்கூட்டியே உயிரிழந்ததை கண்டுபிடித்த எம்பாமிங் டாக்டர் சுதா சேஷய்யன் ஆறுமுகசாமி ஆணையத்தில் பகிர்ந்த தகவல் என்ன..!
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா முன்கூட்டியே உயிர் இழந்து விட்டதை அவரது உடலை எம்பாமிங் எனப்படும் பதப்படுத்துதல் செய்த.
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா கண்டுபிடித்துவிட்டார் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் செல்வி ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீதான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாலை மரணம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பின் ஜெயலலிதாவின் சிகிச்சை அறையில் சலசலப்பு ஏற்பட்டதாக பூங்குன்றனர் கூறுகிறார்.
மகேஸ்வரி என்ற செவிலியர் தன் பிற்பகல் 2 மணிக்கு பணிக்கு வந்தேன்.
ஜெயலலிதா தம்மை டிவி ஆப் செய்ய சொன்னார் பின்னர் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 4 ஆம் தேதி உயிருடன் இல்லை
நளினி என்பவர் டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3:50 மணிக்கு எக்கோ எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறினார்.
ஆனால் எந்த நேரத்தில் இதய செயலிழப்பு ஏற்பட்டது என தெரியாது என்றார்.
அதன் பின்னர் இதய மசாஜ் செய்தனர் ஸ்டெர்னோடமியின் செயல்முறை தொடங்குவதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு இரத்தப்போக்கு அல்லது இரத்த ஓட்டம் இல்லை.
Jayalalitha’s death useful some tips 2022 ஆகையால் அப்போது அவர் உயிருடன் இல்லை என்பதை அது குறிக்கிறது.
ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் கூறுகையில் உடலில் ரத்த ஓட்டம் இருந்தால் ஸ்டெர்னோடமியின் செய்யும்போது தோல் வெட்டப்பட்டால் ரத்தம் வரவேண்டும் சிஆர்பி செய்தால் அதிக ரத்தம் வெளியேறும் என்றார்கள்.
ஜெயலலிதா உயிரிழந்ததை கண்டுபிடித்தார்கள்
Jayalalitha’s death useful some tips 2022 ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்வதற்கு டாக்டர் சுதா சேஷய்யன் இரவு 11:30 மணி அளவில் தொடங்கிய போது ஜெயலலிதா எம்பாமிங் செய்வதற்கு 10 முதல் 15 நேரத்திற்கு முன்னரே இறந்துவிட்டார் என கண்டறிந்தார்.
அதாவது டிசம்பர் 4ஆம் தேதி மாலை 3:50 மணிக்கு ஜெயலலிதா மரணம் உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் எய்ம்ஸ் மருத்துவ குழு அழைப்பு என்பது எல்லாம் முற்றிலும் நேரத்தை போக்குவது என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
உள்நோக்கம் ஏதாவது இருக்கிறதா
Jayalalitha’s death useful some tips 2022 சிஆர்பி செய்து 45 நிமிடங்களுக்குப் பின் இருதயம் செயல்படவில்லை என்றால் நோயாளி உயிரிழந்து விட்டார் என அறிவிப்பார்கள்.
ஆனால் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் நேரத்தை ஒருநாள் நீட்டிட்டு உள்ளார்கள்.
டிசம்பர் 4 மாலை 4:30 மணிக்கு நடந்தது என்ன மயங்கி விழுந்த சசிகலா
சுயநலம் கருதி ஜெயலலிதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது போல் தங்களை திருப்திபடுத்த கேஸ் ஷீட்டில் ஒப்புதல் அளித்துள்ளனர் இவ்வாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.