Kallakurichi student death useful news 2022
கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கு உறவினர்கள் மட்டும் அனுமதி, வெளி ஆட்களுக்கு அனுமதி இல்லை, சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வெளியிட்டுள்ளது..!
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் மாணவியின் இறுதி சடங்கு தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் அதிரடியாக வெளியிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார்.
மாணவி 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் கூறியதை ஏற்க மறுத்த மாணவி பெற்றோர்கள், தொடர்ந்து நீதி கேட்டு போராட்டம் நடத்தி வந்தார்கள்.
சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கை
மாணவியின் உடலை வாங்க மறுத்த பெற்றோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள், இந்த நிலையில் இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்கள்.
இந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து இரண்டாவது முறை பிரேத பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே நேரம் தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை கோரிக்கை வைத்தார், இதனை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
தொடர்ந்து முறையீடுகள்
உயிரிழந்த மாணவியின் உடலை மறுபடியும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரும் உடலை வாங்க மறுத்து வந்தார்கள் இதனிடையே உடலை வாங்க அவர்களுக்குத் உத்தரவிட வேண்டும்.
என கோரிக்கை வைத்ததுடன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு
வழக்கு விசாரணையின் போது மாணவியின் பெற்றோருக்கு நீதிபதி பல்வேறு வகையான கேள்விகளை கண்டிப்புடன் எழுப்பினார்.
Kallakurichi student death useful news 2022 நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை வாங்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உயர்நீதிமன்ற நீதிபதி மாணவியின் உடல் மீது பெற்றோர் பந்தயம் கட்ட வேண்டாம் என்றும் அவருடைய கருத்தை தெரிவித்தார்.
மேலும் மாணவியின் உடற்கூறு ஆய்வு மற்றும் மறு உடற்கூறு ஆய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
நீதிபதியின் கடுமையான உத்தரவு
Kallakurichi student death useful news 2022 இதையடுத்து மகளின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக் கொள்ளப் போவதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்தார்கள், அப்போது நீதிபதி சதீஷ் குமார் நாளை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நாளை மாலை 6 மணிக்குள் இறுதி சடங்குகள் நடத்த வேண்டும்.
இறுதி சடங்கை கண்ணியமான முறையில் நடத்துங்கள், மாணவியின் இருமுறை பிரேத பரிசோதனை அறிக்கையும் ஜிம்பர் மருத்துவ குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
பலத்த பாதுகாப்புகள்
Kallakurichi student death useful news 2022 இதனிடையே கணியமூர் பள்ளி மாணவி இறுதி சடங்கில் அவரது உறவினர்கள் உள்ளது மக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று காவல்துறை அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒலிபெருக்கி மூலம் அந்த கிராமத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாணவி இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள், அமைப்புகள், முக்கியமாக அரசியல் கட்சியை சேர்ந்த எவரும் கலந்து கொள்ளக் கூடாது.
இதனால் மறுபடியும் அசம்பாவிதம் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.