Lic new super saral lifetime pension plan 2022
வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும் எல்ஐசியின் புதிய அசத்தல் திட்டம்..!
பல வகையான உதவும் சிறந்த திட்டங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC)ல் இருக்கிறது.
நீங்கள் வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க விரும்பினால் எல்ஐசியின் இந்த சிறந்த திட்டம் உங்களுக்கு உதவும்.
அதில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பணம் கிடைக்கும் இதன் பெயர் சரல் பென்ஷன் யோஜனா.
இதில் நீங்கள் 40 வயது முதல் ஓய்வூதியம் பெற முடியும்.
பென்சன் திட்டம் கட்டாயம் தேவைப்படும்
Lic new super saral lifetime pension plan 2022 ஒருவகையான ஒற்றை பிரிமியம் ஓய்வூதிய திட்டம் ஆகும் இதில் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு அதாவது பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
அதே நேரம் நீங்கள் வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பை இந்த திட்டம் உங்களுக்கு அளிக்கிறது.
பாலிசிதாரரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய நாமினிக்கு ஒற்றை பிரீமியத்தின் முழு தொகையையும் திருப்பி அளிக்கப்படும்.
இந்த பாலிசி எடுத்த உடனே நீங்கள் ஓய்வு ஊதியம் பெறத் தொடங்கி விடலாம்.
ஓய்வு ஊதியம் பெறும் நபர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கும் அவர் ஒருவேளை உயிரிழந்த பிறகு அடிப்படை பிரீமியம் தொகை அவரது நாமினிக்கு திருப்பித் தரப்படும்.
கணவன் மனைவிக்கான கூட்டு பாலிசியில் இருவருக்கும் முழு கவரேஜ் உள்ளது.
முதன்மை ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும்.
அவரது மரணத்திற்குப் பிறகு அவரது மனைவி வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவார்.
அவர் இறந்த பிறகு அடிப்படை பிரீமியம் தொகை அவரது நாமினிக்கு முழுவதும் கொடுக்கப்படும்.
இந்த திட்டத்திற்கு வயது வரம்பு என்ன
Lic new super saral lifetime pension plan 2022 இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் அதிகபட்சம் 80 ஆண்டுகள் இது உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஊதியம் கிடைக்கும்.
சாரல் பென்ஷன் பாலிசியை தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம்.
மாதம்தோறும் ஓய்வூதியம் பெற முடியும் இது தவிர காலாண்டு அரையாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையிலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்
Lic new super saral lifetime pension plan 2022 மாதம்தோறும் உங்களுக்கு பணம் வேண்டுமென்றால் நீங்கள் குறைந்தபட்சம் 1,000/- ரூபாய்கூட ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 12,000/- என்பதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
அதிகபட்ச வரம்பு இல்லை உங்களுக்கு 40 வயதுயாகி இருக்கிறது என்றால் நீங்கள் 10லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் நீங்கள் ஆண்டுக்கு 50, 250 ரூபாய் பெறுவீர்கள்.
ஒருவேளை நீங்கள் முதலீடு செய்த தொகையை திடீரென்று திரும்ப பெற வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால்.
5 சதவீத தொகையை கழித்த பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகையை முழுவதும் பெற்றுக்கொள்ளலாம்.