Loan or investment which is the best 2022
கடனா முதலீடா வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை தர வேண்டும் உங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த..!
இன்றைய காலத்தில் பல நபர்களுக்கு விடை தெரியாத இருக்கின்ற ஒரு கேள்வி என்றால் அது கடனா அல்லது முதலீட்டுக்கு முன்னுரிமை கொடுக்கலாமா.
ஏற்கனவே இருக்கும் கடனை முதலீட்டில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாமா, என்று தெரியாமல் பல நபர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஆக முதலீட்டு ரீதியிலான நீண்டகால நோக்கில் இருக்கும் முதலீட்டினை எடுத்து கடனை அடைக்கலாம் எது சரியான முடிவு என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கு கடன் உள்பட பல கடனுக்கு வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவில் சரிவில் உள்ளது, இதை வீட்டுக்கு கடன் சரியான நேரம் என ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.
சிறிய ஒப்பீடு தெரிந்து கொள்ளுங்கள்
இதேசமயம் ஃபிக்ஸட் டெபாசிட் காலத்தில் வட்டி விகிதம் குறைந்துள்ளது என்று சொல்லப் போனால் நீண்ட கால நோக்கில் என்றாலும்கூட 5 முதல் 6 சதவீதம்.
என்ற நிலையில் தான் வட்டி விகிதம் இருக்கிறது, எனினும் சமீபத்திய ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகளில் வருமானம் என்பது மிக நல்ல வருமானமாக இருந்து கொண்டே இருக்கிறது.
வருமானம் எவ்வளவு அதற்கான வழி
இதன் மூலம் வருமானம் சுமார் வருடத்திற்கு 10% என்று வைத்துக்கொண்டாலும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதம் தான் இருக்கிறது.
அதை விட முதலீட்டில் தான் எப்பொழுதும் வருமானம் அதிகம் எனவே பொருளாதார ரீதியாக இரண்டையும் தொடங்கலாம் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் கடன் உள்ளது என்றால் நீங்களும் கொஞ்சம் உந்துதலாக வேலை செய்வீர்கள், விரைவில் கடனை அடைக்க வேண்டிய எண்ணமும் இருக்கும்.
வட்டி விகிதம் குறைந்துள்ளது
மொத்தத்தில் கடனுக்கான வட்டி விகிதம் குறைவு அதே வேளையில் உங்களது முதலீடைத் தொடர முடியும் என்ற நிலையில் அதனை தொடரலாம்.
ஏனெனில் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீட்டில் வருமானம் இப்பொழுது அதிகமாக இருக்கிறது, இது ஒரு முதலீட்டிற்கு ஊக்குவிக்கும் உங்களுக்கு நல்ல முறையில் கை கொடுக்கும்.
மிக அவசியம் என்ன
இளைய தலைமுறையினர் உங்களது கடன் முதலீடு இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுப்பது மிக அவசியம், இதில் இன்னும் வரிச்சலுகைகள் என்பது கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
அதனை தொடர்ந்து கொண்டு எஸ்பிஐ போன்ற வங்கிகளில் நீங்கள் முதலீடுகளையும் தொடர முடியும் பட்சத்தில் தொடரலாம் வருமானம், கடனுக்கு தான், சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த கடனை அடைப்பது தான் எப்பொழுது புத்திசாலித்தனமாக இருக்கும்.
மொத்தத்தில் ஒருவர் தனது இளமைக்காலத்தில் தங்களது வருமானத்தில் சிறு தொகையாவது சேமிக்க ஒதுக்க வேண்டும் இது பின்னாளில் பெருமளவில் கைகொடுக்கும் என்பது ஒரு உண்மையான விஷயம்.
அதேசமயம் கடன் இல்லாமல் வாழ்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும், இதுதான் உங்களுடைய வாழ்க்கையில் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தினை கொடுக்க முடியும் என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற 6 சிறந்த திட்டங்கள் வங்கி வட்டியை விட அதிகம் தரும் அஞ்சலக திட்டங்களில்..!
உதாரணத்திற்கு வீட்டுக்கு கடன் என்பது அவசியம் ஒன்றாக பார்க்கப்படுகிறது கடன் வாங்கி வீடு கட்டி விட்டு பின்பு கடனை அடைத்து விடலாம்.
Best 6 insurance plans you must take
ஒரு நிலையான குடியிருப்பு இல்லாமல் உங்களால் வாழ முடியாது உங்களுடைய வாழ்க்கையில் தேவைக்கேற்ப கடன் வாங்குவது அல்லது முதலீடு செய்வது என்பது உங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும்.