Mayilsamy death is a bad news 2023
தகனம் செய்யப்பட்ட மயில்சாமி உடல் கண்ணீருடன் விடை கொடுத்தனர் திரை உலக பிரபலங்கள்..!
நேற்று அதிகாலை திடீரென்று உயிரிழந்த மயில்சாமியின் உடல் வடபழனியில் இருக்கும் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது அவரது இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டனர்.
நகைச்சுவை நடிகரும் பலகுரல் கலைஞருமான மயில்சாமி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை ஆளுமை சிறந்தவராக வலம்வந்தார்.
விவேக் வடிவேலு உள்ளிட்ட பல கலைஞருடன் அவர் நடித்தார் நடிகராக மட்டுமின்றி மிகச் சிறந்த மனிதராக இருந்தவர் மயில்சாமி.
மயில்சாமி சிறந்த சிவபக்தர்
மயில்சாமி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மற்றும் சிவனின் தீவிர பக்தர் ஆவார் வருடாவருடம் திருவண்ணாமலை மகாதீபம் அதற்காக திருவண்ணாமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அதேபோல் சிவராத்திரிக்கு இரவு முழுவதும் கண் விழிக்கும் அளவுக்கு பக்தராக இருந்தவர்.
இந்த வருடமும் சிவராத்திரிக்கு கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் கண் விழித்து இருந்தால் அதையடுத்து வீட்டுக்கு சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.
மயில்சாமியின் மறைவு ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
மயில்சாமி உயிரிழந்த பிறகு அவரது உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
ரஜினிகாந்த் இன்று மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மயில்சாமி எனது நெருங்கிய நண்பர் அடிக்கடி நேரில் சந்தித்து கொள்வோம்.
என்னிடம் இவரைப் பற்றி அடிக்கடி பேசும் நபர் ஒருவர் எம்ஜிஆர் இன்னொருவர் சிவன் கேளம்பாக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்பது அவரின் கடைசி ஆசை.
Mayilsamy death is a bad news 2023 அதனை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என செய்தியாளர்களிடம் மயில்சாமி குறித்து உருக்கத்துடன் ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார்.
இறுதி ஊர்வலத்தில் ஒட்டுமொத்தமாக திரையுலகினர்
மயில்சாமியின் இறுதி ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து அவரது உடல் வடபழனிக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
Mayilsamy death is a bad news 2023 மயில்சாமியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் நகைச்சுவை நடிகர் எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் இருந்தனர், அவரின் இறுதி ஊர்வலத்தில் கண்ணதாசனின் தத்துவ பாடல்கள், எம்ஜிஆரின் பாடல்களும் ஒளிபரப்பப்பட்டது.
மயில்சாமியின் உடல் எரியூட்டப்பட்டதற்கு முன்னதாக தமிழில் மந்திரமும் சொல்லப்பட்டது.