MISA act full details in tamil 2022
மிசா சட்டம் என்றால் என்ன..!
உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டம் தான் மிசா சட்டம் 1973 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆளுமையின் கீழ் இந்தசட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது.
மிசா என்று பரவலாக அறியப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டம் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்காக பலத்த பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இந்த சட்டம் 1971 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இந்த சட்டத்தை கொண்டு வந்தார்.
மிசா சட்டம் என்பது(MISA) (Maintenance Of Internal Security Act)
இந்திய சட்ட செயலாக்கம் பிரிவினருக்கு அதிக அதிகாரங்களை கொடுக்க விதமாக அதன் மூலம் நாட்டில் நிச்சயமற்ற குற்றங்கள் எதுவும் இன்றி எந்த ஒரு தனி நபரையும் கைது செய்யமுடியும் இந்த சட்டத்தின்கீழ்.
அவரின் செயல்பாடுகளை முற்றிலும் முடக்க முடியும் அவரின் அனைத்து உடமைகளை பிடித்து ஆணை இல்லாமல் பறிமுதல் செய்யவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த சட்டம் மனித உரிமைகளை நசுக்குவதற்குயாகும், அரசியல் பழிவாங்கும் செயலாகவும், பெரும்பாலும் தலைவர்களால் பயன்படுத்தப்பட்டது.
இதனால் ஆளுமையில் உள்ளவர்கள் அரசியல் நோக்கத்திற்காக தங்களது அணிக்கு எதிராக செயல்படும் சில நபர்களை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி கைது செய்ய உதவியது இந்த சட்டம்.
நெருக்கடி நிலையின் போது உதவியது
நெருக்கடிநிலை அறிவிப்பின் போது ஆயிரக்கணக்கான மக்கள் எந்த ஒரு விசாரணையும் இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பல சட்டமன்ற உறுப்பினர்களும், அரசியல் தலைவர்களும் நோக்கத்திற்காக கைதானார்கள்.
சட்ட உருவாக்கம்
இந்திய அரசியலமைப்பின் 39வது திருத்தச் சட்டமாக 9 அட்டவணையில் இந்த சட்டம் சேர்க்கப்பட்டது.
பின்பு 1977 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சி மாற்றத்தின்போது ஜனதா கட்சியினர் இந்த சட்டத்தினை 42வது திருத்த சட்டம் 1978 ஆம் ஆண்டுன் இன்படி 9வது அட்டவணையில் இருந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.
தமிழகத்தில் என்ன நடந்தது
தமிழகத்தில் அப்போது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, திமுக தலைவர் கருணாநிதி, சிற்றரசு சிட்டிபாபு, பாண்டியன், உள்ளிட்ட பல நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..!
இப்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த காலகட்டத்தில் தான் தற்போதைய திமுக தலைவர் மு க ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
what are the reason kidney stone new tips 2022
அப்போது சிறையில் காவல்துறை அதிகாரிகளால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது, இந்த நிகழ்வு அவ்வப்போது தமிழகத்தில் விவாதமாகி வருகிறது.