Modi announced useful Job recruitment 10 lakh
10 லட்சம் நபர்களுக்கு மத்திய அரசு வேலை மோடி அரசின் புதிய திட்டம் என்ன..!
அனைத்து துறைகளும் மற்றும் அமைச்சகங்களின் உள்ள வேலைவாய்ப்பு நிலைகளை ஆய்வு செய்த பின்னர்.
அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் நபரை மிஷன் அடிப்படை முறையில் பணியமர்த்த பிரதமர் நரேந்திர மோடி தனது அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களின்.
மனித வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்து அடுத்த வருகின்ற 1.5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 10 லட்சம் நபர்களை பணி முறையில் பணி அமர்த்துவதற்கு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார் என அறிவித்துள்ளது.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சனம் செய்து வரும் நிலையில் அரசின் இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஏராளமான காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்புகள் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தியாவின் நகர்புற வேலையின்மை விகிதம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 12.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது ஜனவரி மார்ச் காலாண்டில் 9.3 சதவீதமாக இருந்தது எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் முதலையின் போது.
காணப்பட்ட 20.8 சதவீத அளவிலிருந்து குறைந்து உள்ளது என்று தேசிய புள்ளியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட சமீபத்திய காலமுறை தொழிலாளர் (PLFS) படை கணக்கெடுப்பு இது காட்டுகிறது.
அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் திட்டங்கள்
Modi announced useful Job recruitment 10 lakh கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பிறகு இந்தியாவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
குறிப்பாக வணிகத்துறை, சிறு, குறு,வணிகன் மற்றும் சிறு குறு பெரு விவசாயம் போன்றவற்றில் வேலைவாய்ப்பு சம்பந்தமான பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதனால் வேலைவாய்ப்பின்மை இப்போது ஓரளவுக்கு நாட்டில் குறைந்துள்ளது எனலாம்.
வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் இப்போது அதிரடியாக பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறது.
இது போன்ற சட்டங்களும் நாட்டில் வரும் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Modi announced useful Job recruitment 10 lakh கொரோனா வைரஸ்க்கு பிறகு உலகில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நிலைமை ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லலாம்.
உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..!
ஏனெனில் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக ஐரோப்பிய, பசிபிக் பிராந்தியத்தில், அதிக அளவில் கோதுமைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது உணவு, குடிநீர், எரிபொருள், சுகாதாரம், மருந்து கையிருப்பு, அந்நியச் செலவாணி கையிருப்பு, போன்றவை சீராக இருப்பதால் வேலைவாய்ப்பின்மை படிப்படியாக குறையும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.