Moola Pathiram endral enna useful tips 2022
மூலப்பத்திரம் என்றால் என்ன..!
அனைவருடைய வாழ்க்கையிலும் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
நிலம் வாங்குவது விற்பனை செய்வது வீடு வாங்குவது விற்பனை செய்வது போன்ற பிரச்சனைகள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
இதனைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வகையான வழிகளை கண்டுபிடித்தாலும் பிரச்சனைகள் என்பது புதிய புதிய வடிவில் வந்து கொண்டேதான் இருக்கிறது.
நீங்கள் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் நிலம் சம்பந்தமான பிரச்சினைகளை சந்திப்பீர்கள் அப்பொழுது பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்க சான்றிதழ், பத்திர பதிவுத்துறை, மூலப்பத்திரம் போன்ற.
பல்வேறு வகையான சான்றிதழ்கள் போன்றவை கட்டாயம் உங்களுக்கு தேவைப்படும்.
உங்களுடைய வாழ்க்கையில் பத்திரப்பதிவு பற்றிய அடிப்படை புரிதல் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள சட்டங்களைப் பற்றி கட்டாயம் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இதனை பற்றிய அடிப்படை தகவல்கள், சிறிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே உங்களுக்கு ஏற்படக்கூடிய நிலம் சார்பான பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வுகளை உங்களால் காண முடியும்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் நிலம் சம்பந்தமான வழக்குகள் என்பது தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய நிலத்தை போலியான பட்டா மூலம் விற்பனை செய்தால் உங்களால் உங்களுடைய நிலம் என்பதை எப்படி நிரூபிக்க முடியுமா.
உங்களுடைய நிலத்தை எப்படி மீட்டெடுக்க முடியும் அதற்கு என்ன மாதிரியான வழிகளை பின்பற்ற வேண்டும்.
ஒருவேளை வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிமன்றம் கேட்கும் ஆவணங்கள் என்ன போன்ற அடிப்படை தகவல்களை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
கட்டாயம் மூலப்பத்திரம் தேவை
Moola Pathiram endral enna useful tips 2022 மூலப்பத்திரம் என்பது தாய் ஆவணம் என்று அழைக்கப்படும் அதாவது தாய் ஆவணம் என்பது ஒரு சொத்து எப்படி முதல் முதலில் ஒருவர் கைக்கு வந்தது என்பதைக் காட்டுவது.
இதர ஆவணங்கள் அந்த ஆவணம் தொடங்கி அதன் தற்போதைய உரிமையாளர் வரை வரிசை பிறழாமல் எங்கனம் கைமாறியது என்பதை காட்டும்.
Moola Pathiram endral enna useful tips 2022 உங்களுடைய நிலத்தை உங்களுக்கு தெரியாமல் போலியான பத்திரப்பதிவு மூலம் விற்பனை செய்தால் அல்லது உங்களுடைய ஆவணங்கள் எதிர்பாராதவிதமாக தொலைந்து போனால்.
மூலப்பத்திரம் மூலம் உங்களுடைய நிலம் சம்பந்தமான அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் எளிதாக தீர்வு காண முடியும்.
இது போன்ற அனைத்து செயல்களுக்கும் மூலப்பத்திரம் கட்டாயம் தேவை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதன் மூலம் மட்டுமே நீங்கள் பாதுகாப்பான நிலம் சம்பந்தமான செயல்களை செய்ய முடியும்.