ஆபத்தான டெல்டா வைரஸிடமிருந்து இவர்கள்தான் தப்பிக்க முடியும் நீங்க இத பண்ணுனிங்களா(Most protection against Delta covid-19 variant)
இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாவது அலையில் மிகப்பெரிய உயிரிழப்பு மற்றும் அதிக வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதற்கு டெல்டா மாறுபாடு என்றழைக்கப்படும் கொரோனா வைரஸின் B.1.617.2 மாறுபாடு ஒரு மாறுபட்ட பிறழ்வு என வகைப்படுத்தப்பட்டுள்ளது
இப்பொழுது நம்மளுடைய நாடு மெல்ல மெல்ல மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வரும் சூழலில் மருத்துவ வல்லுநர்கள் டெல்டாப்லஸ் மற்றும் லாம்ப்டா என இருவகை பிரிவுகளை கண்டறிந்துள்ளார்கள் இது மறுபடியும் மருத்துவர்கள் மற்றும் மக்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த கொரோனா டெல்டா பிறழ்வு ஏன் ஆபத்தானது?
இந்த டெல்டா மாறுபாடு E484Q மற்றும் L452R ஆகிய இரண்டு பிரிவுகளில் இருந்து மரபணு குறியீடுகளைக் கொண்டுள்ளது இதனால் நமது உடலில் எளிதாக நுழைந்து நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் உறுப்புகளை இது மிகவும் எளிதாக தாக்குகின்றது
அதுமட்டுமில்லாமல் கூடுதலான மாறுபாடுகள் புரதத்தின் கட்டமைப்பை மாற்றுவதால் இது மனித புரதங்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதில் மிகவும் திறமையானது மற்றும் விரைவாகப் பரவுகிறது முதல் COVID-19 காட்டிலும் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது
இந்த புதிய பிறழ்வுகாலிருந்து யாரெல்லாம் தப்பிக்கலாம்
எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி போடாத நபர்கள் அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நபர்கள் மற்றும் ஆரம்பத்திலிருந்து கொமோர்பிடீட்டிகளைக் கொண்டவர்களை டெல்டா பிறழ்வு தாக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது
சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது அதில் டெல்டாவில் இருந்து பாதுகாக்ககூடிய நபர்களின் பட்டியலை வெளிப்படுத்துகிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை புனேவின் ஆயுதப்படை மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் தொடர்ந்து நடத்திய ஆய்வின் முடிவில்
கோவிஷீல்ட் தடுப்பூசியின் ஒன்று அல்லது இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் கொரோனா வைரஸிலிருந்து அதிகமாக பாதுகாப்பைப் பெற்று உள்ளார்கள் என தெரியவந்துள்ளது
ஆய்வு வெளிப்படுத்தும் உண்மை என்ன
இந்த ஆய்வு 5 வகை மக்களின் தடுப்பூசிக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை கணக்கில் எடுத்துக் கொண்டது
ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்
இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்
கொரோனா குணமடைந்த பிறகு ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்
கொரோனா குணமடைந்த பிறகு இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்
கோவாக்சின் VS கோவிஷீல்ட் எது நல்லது தடுப்பூசி
COVID-19 திருப்புமுனையை ஏற்படுத்திய வழக்குகள்
ஆய்வின்படி திருப்புமுனை COVID-19 வழக்குகள் மற்றும் கொரோனா குணமடைந்த நோயாளிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்றவர்கள் புதிய டெல்டா ப்ளஸ் மாறுபாடுக்குஎதிராக அதிகமான பாதுகாப்பை தங்கள் உடலில் பெற்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
பிற பிறழ்வுக்கு தடுப்புச்சி எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் வருங்காலங்களில்
உலக சுகாதார மையம் பிற நாடுகள் மற்றும் ஐ சி எம் ஆர் ஆய்வின்படி பாதுகாப்பான பயனுள்ள தடுப்பூச்சியை உருவாக்க விஞ்ஞானிகள் அவசரகால முறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள் அதன் விளைவாக COVID-19 தடுப்பூசிகள் கிடைத்தன
TN Marriage Grant Scheme Latest update 2021
இதனை உலக நாடுகள் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கொடுத்தன COVID-19 எதிரான தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனையில் உண்மையான திரிபுக்கு D614G க்கு எதிராக 51% முதல் 94% செயல்திறனை காட்டுகிறது என தெரியவந்துள்ளது