தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி) .2020 (National Savings Certificate 2020 Tamil)
National Savings Certificate (NSC).2020 இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்ற பிறகு இந்தியாவில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் அவர் தன்னுடைய வருமானத்தை அதிகரிக்க இந்தியாவில் உள்ள முக்கிய திட்டங்களில் முதலீடு செய்துள்ளார் இதனால் அவருடைய வருமானம் சென்ற வருடம் மட்டும் 33 லட்சம் ரூபாய் வருமானம் அதிகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 2.85 கோடி ரூபாயாக இருக்கிறது. அவருடைய சொத்து அதிகரித்ததற்கு அவர் முதலீடு செய்து வைத்த திட்டங்களில் இருந்து வந்த வருமானம்தான்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்து வைத்த முதலீடுகள்.
குஜராத் மாநிலம் காந்திநகர் எஸ்பிஐ வங்கிக் கிளையில் சேமிப்பாக 33,81,73 ரூபாய் வைத்திருக்கிறார். நம் நாட்டின் பிரதமரே எஸ்பிஐ வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கை வைத்து இருக்கிறார். கடந்த ஜூன் 30 2020 நிலவரப்படி மோடி கையில் 31,450 ரூபாய் வைத்திருக்கிறார்.
மோடி அதே வங்கி கிளையில் Fixed deposit,Multi Option திட்டங்களில் 1.60 கோடி ரூபாயை வைத்திருக்கிறார்.
பிரதமர் அவர்கள் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC). சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து சென்ற வருடம் மட்டும் 33 லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறார் என்றால் அந்த திட்டம் எவ்வளவு முக்கிய திட்டம் என்று இந்திய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவர்கள் மட்டும் முதலீடு செய்ய முடியும்
இதில் முதலீடு செய்ய இந்திய குடிமகனாக இருத்தல் போதுமானது.
இந்து கூட்டு குடும்பம் மற்றும் டிரஸ்ட்கள் இதில் முதலீடு செய்ய முடியாது.
இந்து கூட்டு குடும்பத்தில் தலைவர் அல்லது ஒருவர் மட்டும் முதலீடு செய்ய முடியும்.
முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC). முதலீடுகளை இந்திய அரசாங்கம் ஊக்குவிப்பதால் இதில் ஆபத்துகள் இல்லாமல் இருக்கிறது.
இதில் முதலீடு செய்வதால் நிலையான வருமானம் மற்றும் அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும்.
குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் இந்த திட்டத்தில்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் அனைத்து தபால் நிலையங்களிலும் கிடைக்கிறது எனவே இதை எளிதாக வாங்கலாம்.
இந்த சான்றிதழ்களை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் வாங்க முடியும்.
1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் இறந்து விட்டால் அவர்களுடைய முதலீடுகளை அவர்கள் குடும்பம் அல்லது அவரோடு சம்பந்தப்பட்டவருக்கு மாற்றிக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தேவையான சான்றிதழ்கள்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC). சான்றிதழை பூர்த்தி செய்ய வேண்டும்.
சமீபத்தில் எடுத்த புகைப்படம்.
இந்திய குடிமகனாக இருப்பதற்கு அடையாளமாக ஆதார் கார்டு அல்லது பான் கார்டு இருக்க வேண்டும்.
முதலீடு செய்ய வேண்டிய பணம் மற்றும் காசோலை வைத்திருக்க வேண்டும்.
வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காலாண்டுக்கும் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை மத்திய நிதி அமைச்சகம் மாற்றி அமைக்கிறது கடந்த மார்ச் 31 2020 காலாண்டில் 7.9% ஜூன் 30 2020 ஆம் ஆண்டு காலாண்டில் 6.8 % வட்டி வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Best scheme Indian government in 2020.!!!!!
வட்டி எப்படி கொடுக்கிறார்கள்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC). இந்த திட்டம் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாகும் திட்டம் முதிர்ச்சி அடையும் போது தான் வட்டி கொடுப்பார்கள். மேலும் இந்த வட்டிக்கு எந்த ஒரு வரி விதிக்கப்படுவதில்லை.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC). சான்றிதழ்களை வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 8,43,124 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வைத்துள்ளார். பிரதமரே முதலீடு செய்துள்ள திட்டம் என்பதால் கண்டிப்பாக அனைவருக்கும் நன்மை அளிக்கும் விதமாக இருக்கும் twitter