New Best Rangoli Kolams in tamil 2023
ஹிந்து கலாச்சாரத்தின் படி இந்தியத் துணைக் கண்டத்திலும் பல பகுதிகளில் கோலம் என்பது மரபுவழிக் கலைகளில் ஒன்றாக இருக்கிறது.
குறிப்பாக இந்து கலாச்சாரத்தில் அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு, உணவு கொடுப்பது என்பது ஒரு கோட்பாடாக இருக்கிறது.
அதன்படி அரிசிமாவில் வீட்டிற்கு முன்பு கோலமிட்டு விளக்கேற்றி பூக்கள் வைத்து வழிபடுவது இந்து கலாச்சாரத்தின் ஒரு வாழ்க்கை முறையாகும்.
குறிப்பாக அரிசிமாவில் கோலம் போடுவதால் பல்வேறு உயிரினங்கள் பயன் பெறுகிறது.
எறும்புகள், பூச்சிகள், புழுக்கள், பறவைகள், அணில், எலி, போன்ற விலங்குகள் அரிசி மாவை உணவாக எடுத்துக் கொள்கிறது.
ரங்கோலி என்பதற்கான அர்த்தத்தை நன்கு தெரிந்து கொள்ளுங்கள், இது ரங்க ஆவலி என்னும் இரு சமஸ்கிருத சொற்களின் இணைப்பால் உருவானது.
இங்கே ரங்கா என்பது நிறம் என்னும் பொருளையும் ஆவலி என்பது வரிசை அல்லது கொடி என்னும் பொருளையும் கொடுக்கிறது.
தமிழ்நாட்டில் கோலங்களை ரங்கோலிகோலங்கள் என சுருக்கம் செய்வது வழக்கமாக இருக்கிறது இது தவறானது.
கோளங்களின் வளர்ச்சி
New Best Rangoli Kolams in tamil 2023 கோலங்களின் வளர்ச்சி தற்போது முற்றிலும் மாறிவிட்டது, ஒவ்வொரு மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்ப கோலங்களும் மாறுபடும்.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, பீகார், உத்தர பிரதேசம், இந்து மதங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பல்வேறு வண்ணக் கோலங்கள் போடப்படும்.
New Best Rangoli Kolams in tamil 2023 இப்பொழுது அனைத்து வண்ணக் கோலங்களும் இணையதளம் மூலம் பகிரப்படுகிறது, கோலங்கள் புதிய வடிவம் பெற்றுவிட்டது, புதிய நிறங்களையும் பெற்றுவிட்டது, 3D கோலங்களும் இப்பொழுது இடப்படுகிறது.
முற்காலத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து பெறப்படும் நிற பொடிகள் நிற கோலங்கள் இடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.
மஞ்சள்தூள், பல நிறங்களிலான மண், செம்மண், அரிசிமாவு, சுண்ணாம்புக் கற்கள், பொடி போன்றவை பயன்படுத்தப்பட்டன.
தற்காலத்தில் செயற்கை சாயங்களை கொண்டு நிறமூட்டி பொடிகள் பயன்படுத்தப்படுகிறது,பல்வேறு நிறங்களில் கிடைக்கும் தானியங்கள், பருப்பு வகைகள், போன்றவற்றை பயன்படுத்தி கோலங்கள் வரைவது பயன்படுத்தப்படுகிறது.
பயறு, பருப்பு, உளுந்து, அரிசி, போன்றவை அரிசி, ரவை, மரதூள், பயன்படுத்தி, தேங்காய் துருவல், பப்பாளிப்பழம் துருவல், போன்றவற்றுக்கும் விரும்பிய நிற நிறமூட்டி கோலங்கள் இடப்படுகின்றன.
பல்வேறு நிறங்களிலான பூக்களின் இதழ்களையும், இலைகளையும், பயன்படுத்தி கோலங்கள் வரைவது உண்டு, இவ்வாறான கோலங்கள் பூ கோலங்கள் என அழைக்கப்படுகிறது.