கேரளாவை கலங்கடிக்கும் ஆபத்தான நிபா வைரஸ் அறிகுறிகள் என்ன(Nipah virus symptoms treatment new update 2021)
கேரளா தற்போது இரண்டு வெவ்வேறு வைரஸ் நோய்தொற்றுகளுடன் போராடுகிறது நிபா வைரஸ் பரவல் மற்றும் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை இந்தியாவில் இங்கு மட்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த வைரஸ்கள் இயற்கையில் ஒத்ததாக தோன்றினாலும் அவை வெவ்வேறு வழிகளில் பரவுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் 12 வயது உடைய ஒரு சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் அதுமட்டுமில்லாமல் அந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 11 பேர் நோயின் அறிகுறிகளை கொண்டு உள்ளார்கள் என்று கேரளா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிபா வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது அதன் அறிகுறிகள் என்ன என்பதை முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
1990 இல் மலேசியாவில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில் 2001 ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் முதல் முதலில் கண்டறியப்பட்டது, அதில் 45 பேர் உயிரிழந்தார்கள். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு முதன்முதலில் 2018ல் பதிவாகியுள்ளது ,ஆபத்தான செய்தி என்னவென்றால் இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40-80% மற்றும் சிகிச்சை காலம் 2வாரங்கள் மட்டுமே ஆகும்.
இந்த வைரஸ் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரப்பும் வைரஸ் என்று விரிவாக்கலாம் மேலும் இது அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது நேரடி மக்களிடையே பரவுகிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
இது வான்வெளி தொற்று அல்ல மற்றும் வெளவால்கள் மற்றும் பன்றிகளிடம் இருந்து பரவுகிறது, இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் விலங்குகளுக்கும் மிகவும் ஆபத்தாக இருக்கிறது.
இந்த வைரஸின் பொதுவான அறிகுறிகள்
இருமல், தொண்டை புன், தலை சுற்றல், மயக்கம், தசை வலி, சோர்வு மற்றும் மூளையின் வீக்கம், தலை வலி, கழுத்து இறுக்கம், மனக்குழப்பம், வலிப்புபுத்தகங்கள் மற்றும் ஒளி உணர்திறன் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகள்.
இந்த வைரசுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் இல்லை அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்ய வேண்டும், அல்லது சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனை மூலம் இந்த வைரஸை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வைரஸ் சிகிச்சை எடுத்து குணமடைந்த பிறகு ஆன்டிபாடிகள் அதற்கான சோதனை நடத்தப்படுகிறது மூளை அலர்ஜி மற்றும் பிற அறிகுறிகளை கவனிப்பதற்காக மருத்துவர்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதற்கு சுய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் ஆபத்து இன்னும் அதிகமாகலாம்.
கேரள எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் இப்பொழுது மிகத் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது அதுமட்டுமில்லாமல் மத்திய அரசு தமிழகத்திற்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.
Click here to view Our YouTube channel
அதில் குறிப்பாக கேரளாவில் இருந்து வரும் அனைத்து நபர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும், தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், கடுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
Best 5 Benefits of eating Beef in tamil
இல்லை என்றால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது மிக அதிகமாக நடக்கும் என தெரிவித்துள்ளது.