Paati vaithiyam for hair growth best 3 tips
முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம் கூறும் எளிய வழிமுறைகள் என்ன..!
தற்போது ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை என்றால் அது முடி உதிர்தல் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த, உதிர்ந்த இடத்தில் புதிய தலை முடி முளைப்பதற்கும்.
நல்ல மருத்துவம் என்றால் அது பாட்டி வைத்தியம் தான், நாம் இந்த பதிவில் முடி நீளமாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும், வளர்வதற்கு பாட்டி வைத்தியம் கூரும் எளிய வழிமுறைகளை பற்றி முழுமையாகப் பார்க்கப்போகிறோம்.
இதற்கு தேவையான பொருட்கள் என்ன
தேங்காய் பால் – 1 கப்
சோற்றுக் கற்றாழை ஜெல் – சிறிதளவு
செய்முறை எப்படி
தேங்காய்ப்பால் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும் பின் சோற்றுக் கற்றாழை ஜெல் தேவையின் அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ளதை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி கொள்ளவும்.
தலையில் 15 நிமிடம் ஊறிய பின் தலையை அலசி விட வேண்டும் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை செய்து வந்தால் முடி உதிர்தல் குறைந்து முடி வளர ஆரம்பித்து விடும், முடி அடர்த்தி அதிகரிக்கும், தலைமுடி கருமையாக மாறிவிடும்.
தேவையான பொருட்கள் என்ன
மருதாணி இலை – தேவையான அளவு
ஆட்டுப்பால் – ஒரு கப்
வெட்டிவேர் – அரை டேபிள்ஸ்பூன்
கரிசலாங்கண்ணி – தேவையான அளவு
செய்முறை எப்படி
Paati vaithiyam for hair growth best 3 tips முதலில் ஆட்டுப்பால் ஒரு கப் எடுத்து நன்கு சூடாக்கி அதை ஆறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் மருதாணி இலை மற்றும் கரிசலாங்கண்ணி தேவையான அளவு எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஆட்டுப்பால் ஆறிய பின் அதில் அரைத்து வைத்துள்ள மருதாணி இலை ஒரு டேபிள்ஸ்பூன், கரிசலாங்கண்ணி 2 டேபிள்ஸ்பூன், வெட்டிவேர் பொடி அரை டேபிள் ஸ்பூன், சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
அதன் பிறகு இதை தலையின் வேரில் படும் அளவிற்கு நன்கு தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை நீங்கள் பயன்படுத்தி வந்தால் வழுக்கை தலை, சொட்டை முடி உதிர்வு, போன்ற பிரச்சினைகள் முழுமையாக குறையும்.
தேவையான பொருட்கள்
வெந்தயம் – தேவையான அளவு
செம்பருத்தி- 3 (செம்பருத்தி பூ பொடி 2 டேபிள்ஸ்பூன்)
செய்முறை என்ன
Paati vaithiyam for hair growth best 3 tips ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும், மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய சிறுநீரகங்களை சேதப்படுத்திவிடும்
பின் செம்பருத்தி பொடி அல்லது புதிதாக பறித்த செம்பருத்தி பூவை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் மற்றும் செம்பருத்திப்பூவை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
இதை தலையில் தடவி 20 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் தலையை நன்கு அலச வேண்டும், இதன் மூலம் தலை முடி கருமையாக வளர ஆரம்பித்துவிடும்.