PM best scheme for medical assistance 2022
மக்களை தேடி மருத்துவம் மாடலில் தேசிய அளவில் வருகிறது பிஎம் ஸ்பெஷல் திட்டம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு..!
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தைப் போலவே தேசிய அளவில் வீடு தேடி மருத்துவம் மற்றும் சேவை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்திற்கு பிஎம் ஸ்பெஷல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது, தமிழ்நாட்டில் இந்த திட்டம் பல ஆண்டுகளாகவே செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று மருத்துவ சேவைகள் வழங்கும் இந்த திட்டம் மக்களிடையே இந்திய அளவில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற போகிறது.
பல்வேறு பொதுவான நோய்கள் கொண்ட 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கப்பட இருக்கிறது.
மருத்துவ சேவையின் தரம்
சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு மருந்து வழங்குதல், போன்ற பல்வேறு மருத்துவ சேவையில் என்ற திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நேரடியாக வீட்டிற்கு சென்று நோயாளிகளை கண்காணிப்பது அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவது, அவர்களுக்கு தவறாமல் இலவச மருந்து வழங்குதல்.
உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த திட்டம் மூலம் சிறப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது, இதுவரை தமிழ்நாட்டில் 60 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் இந்த திட்டம் மூலம் பயன் பெற்று உள்ளார்கள்.
பிஎம் ஸ்பெஷல் என்ன சொல்கிறது
இந்த நிலையில்தான் இதேபோன்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது பிஎம் ஸ்பெஷல் என்ற பெயரில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வயதான நபர்களுக்கு மருத்துவ சேவையை வீட்டில் வழங்கும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
நேரடியாக வீட்டிற்கு சென்று குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சை வழங்கும் விதமாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு
இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆகியோர் முதியோர்களின் வீடுகளுக்கு சென்று மருந்துகளை வழங்குவார்கள் அதோடு முதியோர்களை கவனித்துக் கொள்ளும் விதமாக ஒரு லட்சம் பேரை பணி அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்டு அடுத்த மூன்று வருடங்களுக்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், சமூக நலத்துறை மூலம் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இந்த திட்டத்தில் எப்படி சேர்வது
PM best scheme for medical assistance 2022 இந்த பயிற்சியை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு விரைவில் இணையதள பக்கம் உருவாக்கப்படும்.
அதற்கான அறிவிப்பு வெளியாகும், இந்த இணைய தள பக்கத்தில் முதியவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொள்ள முடியும்.
உதாரணமாக புதிதாக உருவாக்கப்பட உள்ள இணையதள பக்கத்தில், ஒரு முதியவர் தனது குறைகளை, பாதிப்புகளையும், தெளிவாக பதிவிட முடியும்.
உனக்கு பிடித்த நபர்களை தேர்வு செய்யலாம்
PM best scheme for medical assistance 2022 இதற்கு ஏற்ற பராமரிப்பாளர்களை (caretaker) அந்த பக்கத்தில் பார்க்க முடியும், அதில் உங்களுக்கு பிடித்தமான நபர்களை உங்களால் தேர்வு செய்து கொள்ள முடியும்.
இதில் டாக்டர்களை தேர்வு செய்து கொள்வது போலவே உங்களை கவனித்துக் கொள்ளும் நபர்களையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.
செப்டம்பர் மாதம் இந்த இணையதளம் தொடங்க வாய்ப்பு உள்ளது இந்த இடத்தில் கேர் டேக்கர் ஆக இணைய 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும்.
இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிரிவினருக்கு 10,000 பேருக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.