மத்திய அரசு வழங்கும் ரூ 2,000 உதவித்தொகை விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு(pm Kisan scheme full details in tamil 2021)
பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது இப்பொழுது 9வது தவணைப் பணம் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படலாம் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது
PM-kisan திட்டம் பற்றிய முழு விவரம்
நாட்டில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதால் இதனை சரி செய்யவேண்டும் என நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒரு கோரிக்கையை மத்திய மாநில அரசுகளின் நோக்கி வைத்தார்கள்
இது மிகப்பெரிய ஒரு தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தி விட்டது எனலாம் விவசாயிகளுக்கு சரியான திட்டங்களை அறிவித்தால் மட்டுமே ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் உள்ளது
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டில் நலிவடைந்த விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 3 தவணை முறையில் ரூ6,000/- நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்
இந்தத் திட்டம் 2018ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது மத்திய அரசு விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கில் இந்த பணத்தை செலுத்தி விடுகிறது
கொரோனா காலத்திலும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் போர்க்கால நடவடிக்கை களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் நிதி வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அதன்படி நிதியும் வழங்கி வருகிறது
சமீபத்தில்தான் மத்திய அரசு நாட்டில் இருக்கும் சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ 2,000 பணத்தை செலுத்தியது இது pm-kisan எட்டாவது திட்டமாகும் தற்போது அடுத்த கட்ட திட்டத்தைப் பற்றி மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதாவது ஒன்பதாவது தவணைப் பணம் ஆகஸ்ட் மாதத்தில் வழங்க இருப்பதாகவும்
வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் தகுதியுடைய விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
சில போலி நபர்கள் தங்களது போலி விவரங்களை கொடுத்து இந்த திட்டத்தில் பதிவு செய்து வண்ணம் வகையில் உள்ளார்கள் ஆனால் அதுபோல் இருக்கும் நபர்களுக்கு இதுவரை பணம் வந்து சேரவில்லை
வருகின்ற காலத்தில் இந்த திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண் வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் அதற்கு முதலில் PMKISAN.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
MOST READ மல்லிகை மலர் சிறந்த ஆரோக்கியம் 5 தமிழில்
அதில் framers corner என்பதை கிளிக் செய்து Editi Aadhaar என்பதை நீங்கள் கிளிக் செய்து உங்களது ஆதார் நம்பரை சரியான முறையில் பதிவிட வேண்டும் அதன் கூட கேப்சர் குறியீட்டையும் உள்ளிட்ட நம்பரையும் கொடுக்க வேண்டும்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
இதில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் உங்களுடைய சுய விவரங்கள் தவறாக பதிவிட்ட இருந்தால் அதனை நாம் எளிதாக திருத்திக் கொள்ளலாம் ஆனால் வேறு ஏதாவது விவரங்கள் தவறாக இருந்தால் வேளாண்துறை அலுவலகத்திற்கு சென்று நீங்கள் சரி செய்து கொள்ளலாம்