PM Modi Gave to best idea for tn bjp 2022
மாற்றம் தெரிய தொடங்கிவிட்டது அண்ணாமலைக்கு மோடி கொடுத்த புதிய டார்கெட் ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன..!
சென்னை வந்திருந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்க சென்ற போது பாஜக நிர்வாகிகளை சந்தித்து.
சுமார் 45 நிமிடம் ஆலோசனை நடத்தினார், இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி என்ன பேசினார் என்பது குறித்து தகவல்கள் இப்போது லேசாக கசிந்துள்ளது.
இந்த ஆலோசனையின் போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் பாஜக கட்சியின் செயல்பாடுகள் பற்றியும் பிரதமர் மோடி கேட்டதாக தெரிகிறது.
அதன் பிறகு சில முக்கியமான ஆலோசனைகளையும், தமிழக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
மேலும் திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசை திமுக அரசு கடுமையாக விமர்சித்து வருவது, அதுமட்டுமில்லாமல் விலையேற்றம் தொடர்பான அனைத்து புகார்களையும்.
மத்திய அரசு மீது பழி போடுவது போன்ற செய்திகளையும் பாஜக நிர்வாகிகள் ஆதாரங்களுடன் பிரதமர் மோடிக்கு சொல்லியிருக்கிறார்கள்.
அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அதனால் பிரச்சினை எதுவும் வராது என கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல் முருகன், பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நாயினார் நகேந்திரன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இருந்தார்கள்.
பல்வேறு முக்கிய விஷயம் விவாதிக்கப்பட்டது
இந்த சந்திப்பின் போது பாஜக விஷயங்கள் குறித்து பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார்கள், குறிப்பாக பாஜக நடத்தும் போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்களுக்கு சமீபகாலமாக தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதைக் கேட்ட பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்துள்ளார், அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை பாராட்டியுள்ளார்.
அண்ணாமலைக்கு சில அரசியல் தொடர்பான புதிய யோசனைகளையும், இனிவரும் காலத்தில் தமிழகத்தில் எப்படி போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு புதிய ஐடியாக்களை கொடுத்துள்ளார்.
மாற்றம் தெரியத் தொடங்கிவிட்டது
PM Modi Gave to best idea for tn bjp 2022 கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் வந்ததற்கும் இப்போது வருவதற்கும் நிறைய மாற்றம் தெரிகிறது.
கடந்த முறை நமது கூட்டணி கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட இந்த அளவிற்கு வரவேற்பு இல்லை, இப்போது நமக்கு மக்கள் ஆதரவு என்பது அதிகமாக இருக்கிறது.
காரணம் திமுக அரசு மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள், பாஜகவை தமிழக மக்கள் சிறப்பாக ஏற்றுக்கொண்டார்கள்.
இதை அப்படியே தொடர செய்ய வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் சாதித்துவிடலாம், என பிரதமர் மோடி நம்பிக்கையோடு பேசியதாக தெரிகிறது.
அதிமுகவின் உட்கட்சி விவகாரம்
PM Modi Gave to best idea for tn bjp 2022 இந்த சந்திப்பின் போது அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள், அதிக நபர்கள் இப்பொழுது பாஜகவுக்கு எதிராக பேசி வருவதாகவும்.
PM Modi Gave to best idea for tn bjp 2022 தமிழக பாஜக நிர்வாகிகள் மோடியிடம் தெரிவித்துள்ளார்கள், இதனால் இப்போது வெளிப்படையாக யாருக்கும் எந்த ஆதரவு தெரிவிக்க வேண்டாம்.
தேர்தல் நேரத்தில் விட்டு பிடிப்போம் என கலந்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.