PM Svanidhi yojana scheme full details 2021
7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..!
அனைவருக்கும் வணக்கம் இன்றைய நமது இணையதள பதிவில் தெருவில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கான கடன் உதவி திட்டத்தை பற்றி தான் முழுமையாக பார்க்க போகிறோம்.
மத்திய அரசு கடனுதவி திட்டத்தில் தெருவோர வியாபாரிகள் கடனுதவி எவ்வளவு பெறலாம், இந்த திட்டத்தில் எந்த வியாபாரிகள் கடன் பெற முடியும், என்பது பற்றி முழுமையாக விரிவாக படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.
தெருவோர வியாபாரிகளின் வீடுகளுக்கு சென்று கடனுதவியை வழங்குவதற்கு மத்திய அரசு ஆனது கைபேசி மூலம் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது, இப்பொழுது இந்த திட்டத்தின் மூலம் விவரங்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு சிறு, குறு, வியாபாரிகளை காப்பாற்றுவதற்கு பல்வேறு வகையான புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது, அதில் திட்டத்தில் இந்த திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது.
திட்டம் அமல்படுத்தப்பட்ட தேதி
ஆத்மா நிர்பார் நிதி தொகுப்பின் கீழ் நாடுமுழுவதும் சிறு,குறு, தெருவோர வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி யோஜன கடனுதவி வழங்க கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது தான் இந்த கைபேசி செயலி திட்டம் ஊரடங்கு தெரு வியாபாரிகள் மிகவும் கடினமாக பாதிக்கப்பட்டுள்ளதால்.
அவர்களின் வாழ்வாதாரங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர, மத்திய அரசு, இந்த திட்டத்தை போர்க்கால அடிப்படையில் கொண்டு வந்தது.
அறிமுகம் செய்தவர்
இந்த கடன் வசதியானது வியாபாரிகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று சேரும் வகையில் பிரதமரின் செயல்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயல் திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சகத்தின் செயலாளர் துர்கா சங்கர் மிர்ஷா என்பவர் அறிமுகப்படுத்தியுள்ளார் இந்தியாவில்.
இந்த செயலின் நோக்கம்
இந்த செயலியானது தெருவோர வியாபாரிகள் கடன் விண்ணப்பங்களை பெறுவது, அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல பணிகளை எளிமையாக உள்ளடக்கிய களப்பணியாளர்களுக்கும்.
கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும், இடையில் டிஜிட்டல் மூலம் மிக சுலபமான முறையில் வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது.
வங்கி நிருபர்கள்
வங்கி தொடர்பாளர்கள் வங்கி சாரா நிதி நிறுவனம், நுண்கடன் நிதி அமைப்புகள், அதோடு அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள், இதுபோன்ற பல பணியாளர்கள் மூலம் அதிக அளவில் மக்களிடம் சேரவேண்டும் என்பதற்காக.
அனைத்து பணியாளர்களுக்கும் பயனடையும் வகையில் டிஜிட்டல் மூலம் எளிமையாக, இந்த மொபைல் செயலி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனையில்
டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு மாதத்திற்கும் ரூபாய் 100/- திருப்பிக் கொடுக்கப்படும்.
அடுத்த உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்துவதில் தேதிக்கு முன்னரே கடனைத் திருப்பிக் கொடுப்பது அதன் மூலம் மேலும் அதிக கடன் தொகையை வியாபாரிகள் இந்த திட்டத்தில் எளிமையாக பெற முடியும்.
கடன் பெரும் வசதி
தெருவோரம் தொழில் நடத்தும் வியாபாரிகள் அனைவரும் இந்தத் திட்டத்தில் எளிமையாக கடன் பெறுவதற்கு அவர்களுக்கு எந்த ஆவணமும் இன்றி கடனைப் பெறலாம்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தொலைபேசி மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பிரதமரின் செயலி திட்டத்தில் குறைந்த வட்டியில் வியாபாரிகள் கடனை எளிமையாக பெற்றுவிட முடியும்.
இணையதளம் மூலம் கடன் வசதி பெறுவதைவிட, இந்த மொபைல் செயலி மூலம் மிக எளிமையாக பெற்று விடலாம்.
செயலின் சிறப்பம்சம்
பிரதமரின் ஸ்வநிதி திட்டம் பற்றி இணையதளத்தில் உள்ள அனைத்து விவரங்களும் பிரதமரின் மொபைல் செயலில் உள்ளன இந்த செயலியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதி இருக்கிறது, யார் வேண்டுமானாலும் தங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தில் எப்பொழுதும் முதன் முறையாக கடன் வழங்கப்பட்டது என்றால் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
மானியம்
வங்கி கடன் தொகையை குறிப்பிட்ட காலத்தில் சரியாக செலுத்தி விட்டால் அல்லது காலத்திற்கு முன்னதாகவே செலுத்தி விட்டால் வருடத்திற்கு 7% என்ற அடிப்படையில் மானியம் கொடுக்கப்படுகிறது மத்திய அரசால்.
இயற்கை விவசாயம் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்வது எப்படி..!
மானியம் தொகையானது பயனாளிகளின் வங்கி கணக்கில் காலாண்டுக்கு ஒருமுறை அவரிடம் நேரடியாக கொடுக்கப்பட்டுவிடும்.
கடனை முன்னரே செலுத்தினால் எந்தவித அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் இதுவரை பல்வேறு மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில், 1,54,000/- இருந்து மேற்பட்ட வியாபாரிகள் தொழில் கடன் கேட்டு மொபைல் செயலி மூலம் விண்ண ப்பம் செய்துள்ளார்கள்.
Post office fixed deposit best scheme 2021
அடுத்த 48,000/- வியாபாரிகளுக்கு முன்னதாகவே கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது, இந்த மத்திய அரசு திட்டம் மூலம் அனைத்து தெருவோர வியாபாரிகள் எளிமையாக பயனடையலாம்.